கொழும்பில் பபிள் டீ கிடைக்கும் இடங்கள்.

உங்களோட மனநிலை எப்படி இருந்தாலும் , பபிள் டீ உங்கள் மனநிலையை சில நொடிகளில் சரி செய்யும் .
நீங்கள் பபிள் டீயை சுவைக்கக்கூடிய இடங்களின் பட்டியல் எங்களிடம் உள்ளது.

1.Qu Qu Cafe

விலை வரம்பு: LKR 1,200 – LKR 2,500
இடம்: One Galle Face Mall — No 1A, Galle Face Centre Road, Colombo 02
தொலைபேசி: 0112 574 492
Instagram: @ququcafe_srilanka
Facebook: @Ququ Sri Lanka

வழங்குகப்படுகின்றவை: ஓரியோ மில்க் டீ | மட்சலட் | உபே ராக்சோல்ட் | வின்டர்மெலன் with ரொக்சோல்ட் | Hand Made டாரோ கலவை போன்றவை.

2.Bubbluscious

விலை வரம்பு: LKR 300 – LKR 1,200
இடம்: Bubbluscious At Arcade — ஆர்கேட் சுதந்திர சதுக்கம், கொழும்பு 07| K வலயம் மொறட்டுவ – இல 340, லக்ஷபதிய, மொரட்டுவ| மெஜஸ்டிக் சிட்டி – ஃபுட் கோர்ட், 10 ஸ்டேஷன் ரோட், கொழும்பு 04 | 27, எஸ் டி எஸ் ஜயசிங்க மாவத்தை, நுகேகொட
தொலைபேசி: 0763 661 980
Instagram: @bubbluscious
Facebook: @Bubbluscious

வழங்குகப்படுகின்றவை: Choco Strawberry Lush | செர்ரி சோக்கோ லஷ் | மைலோ டீ | பபில் கம் டீ | டீ வித் ஐஸ்க்ரீம் போன்றவை.

3.Bubble Monster

விலை வரம்பு: LKR 1,300 – LKR 3,000
இடம்: 37/A, எலிபேங்க் வீதி, கொழும்பு 05
தொலைபேசி: 0777 154 454
Instagram: @bubblemonstercmb
Facebook: @Bubble Monster

வழங்கப்படுகின்றவை: ஓரியோ பப்பில் ஷேக் வித் போபா | போபாவுடன் கேரமல் பப்பில் ஷேக் வித் போபா | ஜஸ்ட் நெஸ்டோமால்ட் வித் போபா | ஐஸ் மைலோ ஷேக் வித் போபா | ஐஸ் ஹேசல்நட் பால் டீ.

04.Miss Winni Bubble Tea

விலை வரம்பு: LKR 1,500 – LKR 2,500
இடம்: 450/C, ஆர் ஏ டி மெல் மாவத்தை, கொழும்பு 03
தொலைபேசி: 0770 124 716
Instagram: @misswinnibubbletea
பேஸ்புக்: @miss Winni bubble tea

வழங்கப்படுகின்றவை : கிளாசிக் பப்பில் மில்க் டீ | ஓரியோ பிரவுன் சுகர் பபில் மில்க் டீ | சாக்லேட் பிரவுன் சுகர் மில்க் டீ | தைவான் ஜாஸ்மின் பபில் டீ | பழுப்பு சர்க்கரை பபில் மில்க் டீ போன்றவை.

05. The Layover

விலை வரம்பு: LKR 1,000 – LKR 2,500
இடம்: One Galle Face — No K9, Level LG, 1A Centre Road, Colombo 02 | ஹேவ்லாக் சிட்டி மால் — நிலை 04, 324 – 10, ஹேவ்லாக் வீதி, கொழும்பு 05
தொலைபேசி: 077 052 ​​7580
Instagram: @thelayover.lk
Facebook: @The Layover

வழங்கப்படுகின்றவை : ப்ளன்டட் ஓரியோ | நியுடெல்லா | ஃபெரெரோ ரோச்சர் ஷேக் | புளுபெர்ரி டீ | கிட்காட் ஷேக் போன்றவை.

06. Heavenly Bubble Tea

விலை வரம்பு: LKR 1,000 – LKR 3,000
இடம்: இல 15, 2 பிரதான வீதி, பத்தரமுல்ல
தொலைபேசி: 0777 035 819
பேஸ்புக்:
வழங்கப்படுகின்றவை : டைகர் போபா ஸ்பெஷல் டீ | மச்சா மில்க் டீ | துரியன் மில்க் டீ | ஜாஸ்மின் மில்க் டீ | மைலோ மில்க் டீ போன்றவை.

07.Bubble Me Bubble Tea

விலை வரம்பு: LKR 700 – LKR 2,500
இடம்: 106, திம்பிரிகஸ்யாய வீதி, கொழும்பு 05
தொலைபேசி: 0112 554 152
Instagram: @bubblemebubbletea
Facebook: @Bubble Me Bubble Tea

வழங்குகப்படுகின்றவை : மைலோ டீ | ஃபலூடா மில்க் டீ | டாரோ | ஹேசல்நட் ஒயிட் சாக்லேட் | பெபாரமென்ட் சாக்லேட் மில்க் டீ போன்றவை.

08.Bubble Mania

விலை வரம்பு: LKR 500 – LKR 2,000
இடம்: ரோயல் ஆர்கேட், கிரிமண்டல மாவத்தை, கொழும்பு 05
தொலைபேசி: 0117 173 827
Instagram: @bubblemania.lk
Facebook: @Bubble Mania Sri Lanka

வழங்கப்படுகின்றவை: மைலோ டைனோசர் வித் போபா | போபாவுடன் தாய் மில்க் டீ | பெர்ரி மோஜிடோ வித் போபா | ஐரிஷ் காபி மில்க் ஷேக் வித் போபா | பபிள் ஷாக் மோஜிடோ வித் போபா போன்றவை.

09.A-Ki-Cha Bubble Tea

விலை வரம்பு: LKR 750 – LKR 950
இடம்: டெலிவரி மட்டும்
Instagram: @akicha_lk
Facebook: @A Ki Cha Bubble Tea LK

வழங்கப்படுகின்றவை: தைவான் மில்க் டீ | ஜாஸ்மின் ஐஸ்கட் டீ | லிச்சி கிரீன் ஐஸ் டீ | கிவி க்ரீன் ஐஸ் டீ | கெப்பசினோ மில்க் டீ போன்றவை.

10.Island Tea Co. & Ceylon Coffee Club

விலை வரம்பு: LKR 840 – LKR 1,620
இடம்: 548, நாவல வீதி, நாவல
தொலைபேசி: 0766 216 611
Facebook: @Island Tea Co. & Ceylon Coffee Club – Sri Lanka

வழங்கப்படுகின்றவை : நியுடெல்லா கிரீம் சீஸ் மில்க் டீ | கிங் மில்க் டீ | வைல்ட்பெர்ரி ஐஸ்ட் ஃப்ரூட் டீ | சிலோன் கிரீம் சீஸ் மில்க் டீ | ஓரியோ சோக்கோ ஷேக் போன்றவை.

பபில் டீ ஒரு புதுவிதமான சுவையை தரும் , சுவைத்துப்பார்க்க விரும்புகிறீர்களா? இப்பொழுதே செல்லுங்கள்.

2024இல் கொழும்பைச் சுற்றியுள்ள உயர் தேநீர் அருந்தும் இடங்கள்.

ஒரு புது அனுபவத்தை பெற, ஆவலுடன் இருக்கின்றீர்களா? எப்போதாவது  சரி ஒரு நல்ல தேநீரை விரும்புபவரா? கொழும்பில் அதிக தேநீர் நிறைந்த இடங்கள் உள்ளன, அங்கு நீங்கள் மதிய உணவு, உங்கள் அணியுடன் ஒரு அழகான Hang – Out  அமர்வு அல்லது உங்கள் துணையுடன் சேர்ந்து கழிக்கும் இனிமையான நேரமாக கூட இருக்கலாம்.

எனவே கொழும்பில் வழங்கப்படும் சூடான உயர் தேநீர் buffet மற்றும் platter பற்றிய ஒரு ரவுண்ட்-அப் இங்கே!

Buffets

  • Lobby Bar

நேரம்: புதன் – ஞாயிறு 3.30 PM – 6.00 PM வரை

தொலைபேசி: 0112 544 544

முகவரி: Galadari Hotel – இல 64, லோட்டஸ் வீதி, கொழும்பு 01

விலை: ஒரு நபருக்கு நிகர ரூ. 3,900 (புதன் – வெள்ளி) | ஒரு நபருக்கு LKR 4,300 வரை(சனி – ஞாயிறு)

Instagram: @galadarihotel

Facebook: @GaladariHotel

இணையதளம்: Galadari Hotel

குறிப்புகள்: Unlimited buffet

 

  • Members’ Lounge

நேரம்: வெள்ளி – ஞாயிறு, 3.00 PM – 6.00PM மணி வரை

தொலைபேசி: 0775 249 725 | 0777 448 534

முகவரி: Waters Edge – இல 316, எத்துல் கோட்டே வீதி, பத்தரமுல்ல

விலை: ஒரு நபருக்கு ரூ. 4,900 வரை (வெள்ளிக்கிழமை)| ஒரு நபருக்கு LKR 5,200 வரை (சனி – ஞாயிறு)

Instagram: @watersedgesl

Facebook: @WatersEdgeSL

இணையதளம்: Waters Edge

குறிப்புகள்: முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும்.

 

  • Graze Kitchen

நேரம்: தினமும், மதியம் 12.30 AM – 2.30PM வரை (முதல் அமர்வு) | மாலை 3.00 PM – 5.00 PM வரை (இரண்டாவது அமர்வு)

தொலைபேசி: 0112 492 492

முகவரி: ஹில்டன் கொழும்பு – இல 02, சார் சித்தம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொழும்பு 02

விலை: ஒரு நபருக்கு LKR 6,567 நிகரம் (பெரியவர்கள்) | ஒரு நபருக்கு LKR 3,342 நிகரம் (குழந்தைகள்)

Instagram: @grazekitchen.cmb

Facebook: @Graze Kitchen

இணையத்தளம்: Hilton Colombo

குறிப்புகள்: ஆன்லைனில் முன்பதிவு செய்தால் 10% தள்ளுபடி பொருந்தும்

 

  • Coffee Shop

நேரம்: சனி – ஞாயிறு, 3.30 PM – 6.00 PM வரை

தொலைபேசி: 0117 450 450

முகவரி: Movenpick Hotel Colombo — இல. 24, தர்மபால மாவத்தை, கொழும்பு 03

விலை: ஒரு நபருக்கு LKR. 3,900

Instagram: @movenpickcmb

Facebook: @movenpickcolombo

இணையத்தளம்: Mövenpick Hotel Colombo

 

  • Gardenia Coffee Shop

நேரம்: வெள்ளி – ஞாயிறு, 3 pm – 6 pm வரை

தொலைபேசி: 0777 864 864

முகவரி: Ramada by Wyndham Colombo— இல. 30, சேர் முகம்மட் மாக்கான் மார்க்கர் மாவத்தை, கொழும்பு  03

விலை: ஒரு நபருக்கு   LKR 4,100

Instagram: @ramadacolombo

Facebook: @ramadacolombo

இணையத்தளம்: Ramada by Wyndham Colombo

Buffets and Platters

 

  • Verandah

நேரம்: திங்கள் – வியாழன், 4 pm – 6 pm (platter) | வெள்ளி – ஞாயிறு, 4 pm – 6 pm (buffet)

தொலைபேசி: 0117 541 010

முகவரி: Galle Face Hotel — 2, காலி வீதி , கொழும்பு 03

விலை: ஒரு நபருக்கு LKR 3,900 (platter) | ஒரு நபருக்கு LKR 4,390  (buffet)

Instagram: @gallefacehotel

Facebook: @Galle Face Hotel

இணையத்தளம்: Galle Face Hotel

 

  • Lobby Lounge

நேரம்: திங்கள் – வெள்ளி, 3.30 pm –  5.30 pm வரை (platter) | சனி  – ஞாயிறு, 3.30 pm – 5.30 pm வரை(buffet)

தொலைபேசி: 0112 491 000

முகவரி: Cinnamon Lakeside — இல. 115, சேர் சித்தம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொழும்பு 02

விலை: LKR 7,200 இரண்டு நபர்களிற்கு  (platter) | LKR 5,000 ஒரு நபருக்கு  (buffet)

Instagram: @cinnamonlakeside

Facebook: @cinnamonlakeside

இணையத்தளம்: Cinnamon Lakeside Platters

 

  • Colpetty Lounge

நேரம்: தினமும் , 3 pm – 5 pm வரை

தொலைபேசி: 0117 678 000

முகவரி: Sheraton Colombo — இல. 265, காலி வீதி , கொழும்பு 03

விலை: இரண்டு நபர்களிற்கு  LKR 6,000

Instagram: @sheratoncolombohotel.official

Facebook: @SheratonColomboHotel

இணையத்தளம்: Sheraton Colombo

குறிப்புகள்: முன்பதிவு செய்ய வேண்டும்

 

  • Sapphyr Lounge

நேரம்: தினமும் , 3 pm – 5 pm வரை

தொலைபேசி: 0117 888 288

முகவரி: Shangri La Colombo — 1, காலி முகத்திடல், கொழும்பு 02

விலை: ஒரு நபருக்கு  LKR 6,986

Instagram: @shangrilacolombo

Facebook: @ShangriLaCMB

இணையத்தளம்: Shangri La Colombo

 

  • Churros

நேரம்: தினமும் , 3 pm – 5.30 pm வரை

தொலைபேசி: 0112 421 221

முகவரி: The Kingsbury Hotel — இல. 48, ஜனாதிபதி  மாவத்தை , கொழும்பு 01

விலை: ஒரு நபருக்கு LKR 3,600

Instagram: @thekingsbury

Facebook: @TheKingsbury

இணையத்தளம்: The Kingsbury

 

  • Lattice

நேரம்: வெள்ளி – சனி , 3 pm – 6 pm வரை

தொலைபேசி: 0112 446 622

முகவரி: Taj Samudra — 25, காலி முகத்திடல் மத்திய வீதி, கொழும்பு 08

விலை: ஒரு நபருக்கு LKR 4,950

Instagram: @tajsamudracolombo

Facebook: @TajSamudraColombo

இணையத்தளம்: Taj Samudra Colombo

குறிப்புகள்: முன்பதிவு செய்து முன்பணம் செலுத்த வேண்டும்.

 

  • L.A.B

நேரம்: தினமும் , 2.30 pm – 6 pm வரை

தொலைபேசி: 0112 492 492

முகவரி: Hilton Colombo — இல. 02, சார் சித்தம்பலம் A கார்டினர் மாவத்தை , கொழும்பு 02

விலை: LKR 7,910 இரண்டு நபர்களிற்கு  (Western Platter or Island Memories) | LKR 7,104 இரண்டு நபர்களிற்கு  (Western Vegetarian Affair)

Instagram: @labhilton

Facebook: @L.A.B

இணையத்தளம்: Hilton Colombo

 

  • Tea Lounge

நேரம்: தினமும் , 3 pm – 6 pm வரை

தொலைபேசி: 0112 497 274 | 0112 437 437

முகவரி: Cinnamon Grand — 77, காலி வீதி, கொழும்பு 03

விலை: இரண்டு நபர்களிற்கு  LKR 6,800

Instagram: @cinnamongrandcolombo

Facebook: @CinnamonGrandC

இணையத்தளம்: Cinnamon Grand

 

  • 57

நேரம்: தினமும் , 3.30 pm to 5.30 pm

தொலைபேசி: 0112 550 200

முகவரி: Jetwing Colombo Seven — இல.. 57, வார்டு பிளேஸ், கொழும்பு 07

விலை: இரண்டு நபர்களிற்கு LKR 4,250

Instagram: @jetwingc7

Facebook: @jetwingcolomboseven

இணையத்தளம்: Jetwing Colombo Seven

 

  • Ward 7

நேரம்: தினமும் , 3.30 pm to 5.30 pm

தொலைபேசி: 0112 550 200

முகவரி: Jetwing Colombo Seven — இல.. 57, வார்டு பிளேஸ், கொழும்பு 07

விலை: ஒரு நபருக்கு LKR 6,000

Instagram: @jetwingc7

Facebook: @jetwingcolomboseven

இணையத்தளம்: Jetwing Colombo Seven

 

  • DINE

நேரம்: தினமும் , 3 pm – 5 pm வரை

தொலைபேசி: 0112 555 570

முகவரி: Radisson Hotel Colombo — இல. 36-38, கிலிஃபோர்ட் பிளேஸ், கொழும்பு 04

விலை: இரண்டு நபர்களிற்கு  LKR 5,500

Instagram: @radissonhotelcolombo

Facebook: @Radisson Hotel Colombo

இணையத்தளம்: Radisson Hotel Colombo

குறிப்புகள்: 24 மணிநேரத்திற்கு முன்பாக முன்பதிவு செய்ய வேண்டும்.

 

  • Amber Poolside

நேரம்: தினமும் , 3 pm – 5 pm வரை

தொலைபேசி: 0114 645 333

முகவரி: Colombo Court Hotel and Spa — 32, ஆல்ஃபிரட் ஹவுஸ் அவென்யூ, கொழும்பு 03

விலை: LKR 4,900 இரண்டு நபர்களிற்கு(Ceylon High Tea) | LKR 5,000 இரண்டு நபர்களிற்கு  (English High Tea)

Instagram: @colombo court_hoதொலைபேசி

Facebook: @Colombo Court Hotel & Spa

இணையத்தளம்: Colombo Court Hotel & Spa

குறிப்புகள்: 24 மணி நேரத்திற்கு முன் முன்பதிவு செய்து 50% முற்பணம் செலுத்த வேண்டும்.

 

  • English Cake Company

நேரம்: தினமும் , 3 pm – 7 pm வரை

தொலைபேசி: 0117 833 125

முகவரி: 18/15, Chitra Lane, கொழும்பு 05

விலை: இரண்டு நபர்களிற்கு LKR 3,900 (Quick Tea) | இரண்டு நபர்களிற்கு LKR 3900 (Queen’s Platter) | இரண்டு நபர்களிற்கு LKR 4900  (King’s Platter)

Instagram: @tecclk

Facebook: @TheEnglishCakeCompany

இணையத்தளம்: English Cake Company

குறிப்புகள்: 24 மணிநேரத்திற்கு முன் முன்பதிவு செய்ய வேண்டும், விலைகள் 10% சேவைக் கட்டணத்திற்கு உட்பட்டது.

 

  • Park Street Warehouse

நேரம்: தினமும் , 3 pm – 6 pm வரை

தொலைபேசி: 0777 777 004

முகவரி: இல. 33, பார்க் லேண்ட்  2, பார்க் ஸ்ட்ரீட், கொழும்பு 02

விலை: ஒரு நபருக்கு  LKR 2,200  | இரண்டு நபர்களிற்கு LKR 4,200

Instagram: @park_street_warehouse

Facebook: @parkstreetwarehouse

இணையத்தளம்: Park Street Warehouse

குறிப்புகள்: விலைகள் அரசாங்க வரிகள் மற்றும் சேவைக் கட்டணத்திற்கு உட்பட்டது

 

  • Mitsis Delicacies

நேரம்: தினமும் , 2 pm – 7 pm வரை

தொலைபேசி: 0777 163 090

முகவரி:  34A, Bagatalle Road, கொழும்பு 03

விலை: ஒரு நபருக்கு LKR 3,000

Instagram: @mitsisdelicacies

Facebook: @mitsis.delicacies

இணையத்தளம்: Mitsis Delicacies

குறிப்புகள்: விலைகள் அரசாங்க வரிகள் மற்றும் சேவைக் கட்டணத்திற்கு உட்பட்டது.

 

  • CHOLA Authentic Indian Restaurant

நேரம்: தினமும் , 3.30 pm – 6.30 pm வரை

தொலைபேசி: 0114 363 118

முகவரி: 52, Nelson Place, வெள்ளவத்தை, கொழும்பு 06

விலை: இரண்டு நபர்களிற்கு LKR 3,740

Instagram: @chola_colombo

Facebook: @CHOLA Authentic Indian Restaurant

இணையத்தளம்: CHOLA Authentic Indian Restaurant

குறிப்புகள்: அதே விலையில் சைவ உணவுகளும் கிடைக்கும்.

இந்த கொழும்பின் சிறந்த இடங்களில் உங்கள் தேநீர் உலகிற்கான புது அனுபவத்தை நாடிச் செல்லுங்கள்.

இலங்கைக்கு அதி நவீன BAIC X55 II SUV ஐக் கொண்டுவரும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ்.

இலங்கையிலுள்ள வாகன ஆர்வலர்களிற்கு மகிழ்ச்சி தரும் விதமாக டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) நிறுவனம் அதி நவீன BAIC X55 II SUV ஐ வெளியிட்டுள்ளது. இதற்கான முன்கூட்டிய பதிவு சேவையும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் ஆட்டோமோட்டிவ் இண்டஸ்ட்ரி ஹோல்டிங் லிமிட்டட் நிறுவனம் (BAIC) உடன் DPA மூலோபாய கூட்டாண்மை ஊடாக கைகோர்த்து இந்த புதுமையான அனுபவத்திற்கு வித்திட்டுள்ளது.

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முறையில் இறக்குமதி செய்யப்பட்டு, மேலதிக பெறுமதி சேர் சேவைகளின் உள்ளடக்கத்துடன், இலங்கையின் வாகன துறைக்கு மறுவடிவமைப்பு அளிக்கும் வகையில், BAIC X55 II அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . வாடிக்கையாளர்கள் அவர்களிற்கு தேவைக்கு ஏற்றாற் போல் அடிப்படையான அம்சங்களுடன் கூடிய BAIC X55 II Honor அல்லது முழுமையான தெரிவுகளுடன் கூடிய BAIC X55 II Luxury என்பவற்றை தெரிவு செய்ய கூடியதாகவுள்ளது.

“டேவிட் பீரிஸின் வாகன மரபானது புத்தாக்கமான கண்டுபிடிப்புக்களால் தற்போது அபரிவிதமான முன்னேற்றமடைந்துள்ளது. இலங்கையில் BAIC X55 II வாகனத்தை அறிமுகப்படுத்துவதானது குறிப்பிடத்தக்க ஒரு வெற்றியாகும். இலங்கையிலுள்ள வாகன ஆர்வலர்களின் ஓட்டுநர் அனுபவத்தை மாற்ற கூடிய முன்னேற்றகரமான மற்றும் அடுத்த தலைமுறைக்கான அம்சங்களைக் இதன் மூலம் அனுபவிக்க முடியும்” என்று டேவிட் பீரிஸ் குழுமத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான திரு ரோஹன திஸாநாயக்க தெரிவித்தார்.

X55 II இன் அதி நவீன தொழிநுட்ப அம்சங்கள்

BAIC X55 II ஆனது 1500CC டர்போ எஞ்சின், 7DCT டிரான்ஸ்மிஷன் மற்றும் 19″ அலாய் வீல்கள், பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோ பாப்-அப் கதவு கைப்பிடிகள் மற்றும் டூயல் எக்ஸாஸ்ட்கள் போன்ற கண்களைக் கவரும் டிசைன் அமைப்புகளுடன் தனித்தன்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.மகேஷ் குணதிலக விளக்கமளிக்கையில், “ஓட்டுநர் அனுபவம் நிச்சயம் தரமானதாக இருக்கும். அறிவார்ந்த பாதுகாப்பு அம்சங்களுடன், அடப்டிவ் க்ரூஸ் கொன்ரோல், ஒழுங்கையிலிருந்து வெளிச்செல்லும்போதான எச்சரிக்கை, முன் ஆசனத்தின் கீழான சூடாக்கி மற்றும் காற்றோட்டம், சாரதி ஆசனத்தின் நினைவகம், பின் ஆசனத்தின் கோணமாக சீர் செய்யக்கூடிய திறன், பல்வேறு வர்ணங்களைக் கொண்ட உள்ளக மின்குமிழ் அமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களை இது கொண்டுள்ளது” என்கிறார்.

6 ஏர்பேக்குகள், ஓட்டுநர் சோர்வு எச்சரிக்கை, 360 டிகிரி கேமரா மற்றும் எல்லா மாடல்களிலும் திருட்டு எச்சரிக்கை தொழிநுட்பம் போன்ற அம்சங்களுடன் பாதுகாப்பு மிக முன்னனித்துவம் பெற்று நிற்கின்றது .மேலும், 10-inch சென்ட்ரல் கண்ட்ரோல் ஸ்கிரீன், LCD இன்ஸ்ட்ருமென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் இணைப்பு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் நவீனத்துவத்தை விரும்பும் ஓட்டுனர்களிற்கு ஒரு விருந்தாக அமையும்.

டேவிட் பீரிஸின் உத்தரவாதம்

டேவிட் பீரிஸ் குழுமம் விற்பனைக்குப் பின்னான சேவையில் நற்பெயர் பெற்று வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆதரிக்கப்படுகின்றது. எளிதில் கிடைக்கும் உதிரி பாகங்கள், நிபுணர்சார் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் ஹைட் பார்க் கார்னரில் அதிநவீன சேவை வசதி ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். டெஸ்ட் டிரைவ்களும் முன்கூட்டிய பதிவுகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முன்கூட்டிய பதிவுகள் 2024 ஜூன் ற்குள் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BAIC: ஒரு உலகளாவிய ஆட்டோமோட்டிவ் பவர்ஹவுஸ்

BAIC வாகன துறையில் ஒரு முன்னோடி சக்தியாக இருந்து வருகின்றது. இந்நிறுவனம் அமெரிக்க மோட்டார்ஸ் கோப்ரேஷென், ஹூண்டாய் கொரியா மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற ஜாம்பவான்களுடன் கூட்டு முயற்சிகளை ஏற்படுத்தியுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்துடன் நெருக்கமாக செயற்பட்டு வரும் BAIC நிறுவனம், மெர்சிடிஸ் பென்ஸ் குழுமத்தில் 9.98% பங்குகளை கொண்டிருப்பதுடன், இதுவே தனிப்பட்ட பங்காளர் ஒருவர் கொண்ட பாரிய பெருந்தொகையாகும். தனியார் கார்கள் (ARCFOX, பீஜிங் மற்றும் BAIC ORV), சுயாதீன வணிக வாகனங்கள் (BAIC Foton, BAIC Changhe) மற்றும் கூட்டு முயற்சி வர்த்த நாமங்கள் (Beijing Benz, Fujian Benz, Beijing Hyundai Motor மற்றும் Foton Daimler) உட்பட பல்வேறு தயாரிப்பு உடைமையை BAIC கொண்டுள்ளது.

காத்திருக்க வேண்டாம் – இன்றே உங்கள் BAIC X55 II ஐ பதிவு செய்து கொள்ளுங்கள்.

இலங்கையின் வாகனத்துறையின் எதிர்காலத்தை அனுபவிக்க, 011 4 700 678 என்ற இலக்கத்திற்கு DPA ஐ தொடர்பு கொள்ளவும்.

இலங்கையில் தொடரும் மருத்துவ துறையின் தோல்விகள்!

இலங்கையில் உள்ள பல அரசு மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறையாக உள்ளன. இதனால், நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்க முடியாமல் போகிறது.

இலங்கையில் மருத்துவ பணியாளர்களின் பற்றாக்குறை ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக, அறுவை சிகிச்சை நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களின் பற்றாக்குறை அதிகமாக உள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் நிர்வாக சீர்கேடு மருத்துவத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவமனைகளில் முறையான நிர்வாகம் இல்லாததால், சிகிச்சை தரத்தில் குறைபாடு ஏற்படுகிறது.

இலங்கையில் மருத்துவ துறையின் தோல்விகள் பின்வருமாறு :

  • மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை
  • பணியாளர் பற்றாக்குறை
  • மருத்துவமனைகளின் கட்டமைப்பு மோசமானது
  • சுகாதாரத் துறையில் அரசாங்கத்தின் கவனக்குறைவு

இலங்கை மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள தோல்விகள் சில:

  • பேராதனை வைத்தியசாலை:

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளின் பயன்பாடு இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் இந்த மருந்துகளை பரிந்துரைத்த நோயாளிகளிடையே சுகாதார பிரச்சினைகள் மற்றும் இறப்புகள் கூட உள்ளன.

இந்தியாவைச் சேர்ந்த புபிவாகைன் என்ற மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். அதே மருந்தால் கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்த சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்திய மயக்க மருந்தைப் பயன்படுத்துவதை சுகாதார அமைச்சகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

பதிவு செய்யப்படாத சப்ளையர்களிடம் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு தேசிய மருந்து கட்டுப்பாட்டாளர் பதிவு விலக்கு அளித்திருப்பது குறித்தும் மனுவில் கவலை தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் சாவோரைட் பார்மாசூட்டிகல்ஸ் மற்றும் கௌசிக் தெரபியூட்டிக்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த வழக்கை தொடர அனுமதித்த உச்ச நீதிமன்றம், இந்நிறுவனங்களில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

மே 2023 இல், இலங்கையில் உள்ள நுவரெலியா மருத்துவமனையில் 10 மருத்துவர்களுக்கு இந்திய மருந்துகள் பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்துவதாக ஒரு செய்தி வந்தது. இந்த மருத்துவர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு இந்திய மருந்துகளை பரிந்துரைத்தனர், ஆனால் அவர்கள் பார்வை குறைபாடுகள் குறித்து புகார் செய்தனர். கண் சொட்டு மருந்துகளில் கிருமிகள் இருந்ததால் நோயாளிகளின் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கருதுகின்றனர். சுகாதார அதிகாரிகள் இந்த பிரச்சினை

 

யை ஆராய்ந்து, மேலும் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக மருந்தை திரும்பப் பெற்றுள்ளனர்.

  • மட்டக்களப்பு அரசு மருத்துவமனை:

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 17 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தோல் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாணவி உயிரிழந்துள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தாயின் குற்றச்சாட்டு: இச்சம்பவம் குறித்து யுவதியின் தாயார் கருத்து தெரிவிக்கையில், “எனது மகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தோல் சிகிச்சை பிரிவில் மருந்துகளை பெற்றுக் கொண்டிருந்த போது திடீரென காய்ச்சலும் வாந்தியும் ஏற்பட்டது. அதன் பிறகு மகள் இறந்துவிட்டாள்” என்று குற்றம் சாட்டினார்.

  • யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனை:

யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எட்டு வயது சிறுமியின் கையை தாதி ஒருவர் தவறுதலாக துண்டித்துள்ளார்.

சிறுமியின் உறவினர்கள் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்த மருத்துவமனை அதிகாரிகளை வலியுறுத்துகின்றனர்.

செவிலியரின் தவறான நடவடிக்கை மற்றும் ஊசி மூலம் சிறுமியின் கை துண்டிக்கப்பட்டது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுமியின் குடும்பத்தினருக்கும் தன்னார்வலர்களுக்கும் இடையில் முன்விரோதம் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள், குறித்த தாதி, நோயாளர்களுக்கு முன்னர் தவறான மருந்து மற்றும் ஊசிகளை செலுத்தியதாகவும், இதன் விளைவாக நோயாளிகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவது குறித்து பல முறைப்பாடுகள் வந்ததாகவும் கூறுகின்றனர்.

சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் வழக்குகளில், சுகாதார அதிகாரிகள் பொதுவாக விசாரணைக் குழுக்களை நியமிக்கிறார்கள், ஆனால் மருத்துவத் துறை அறிக்கைகளை வெளியிட மறுக்கிறது என்று அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

மாநில சுகாதாரத் துறையில் மற்ற சமீபத்திய சம்பவங்கள் மற்றும் இறப்புகள்:

  • உணவு நச்சுத்தன்மையின் அறிகுறிகளுடன் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 21 வயதுடைய பெண் ஒருவரின் மரணம், Ceftriaxone என்ற நுண்ணுயிர் எதிர்ப்பியை செலுத்தியது.அனாபிலாக்ஸிஸ் நோயால் அவள் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
  • குளியாப்பிட்டியவில் நான்கு மாதக் குழந்தையொன்று உயிரிழந்த நிலையில், ஹெட்டிபொலவில் பெண்டாவலன்ட் தடுப்பூசி போடப்பட்டு நலமாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
  • இலங்கை தேசிய கண் வைத்தியசாலையில் லென்ஸ் மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 35 வயது பெண் உயிரிழந்துள்ளார்.
  • சிசேரியன் அறுவை சிகிச்சையின் போது கர்ப்பமாக இருக்கும் தாய் ஒருவருக்கும், குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட இருந்த வயோதிபப் பெண்ணுக்கும் ஏற்பட்ட இரண்டு மரணங்களைக் கையாள்வதில், பேராதனை மருத்துவமனையில் பியூபிவாகைன் என்ற முதுகுத்தண்டு மயக்க மருந்து காரணமாக, இது கொண்டுவரப்பட்டதாக அவர் கூறினார். WOR இன் கீழ், மீண்டும் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தால். அதுவும் இந்த மருந்தை முன்பே பதிவு செய்திருந்தது ஆனால் பதிவு காலாவதியானது. இந்த நிறுவனம் இந்த டெண்டருக்காக இந்திய கிரெடிட் லைன் (ஐசிஎல்) கீழ் ஏலம் எடுத்தது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, நாட்டின் சுகாதார சேவையை கடுமையாக பாதித்துள்ளது. பொது சுகாதார நிறுவனங்கள் மருந்து தட்டுப்பாடு, ஒத்திவைக்கப்பட்ட அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் இழப்பை எதிர்கொள்கின்றன. 1,000 க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் சமீபத்தில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர், மேலும் கடந்த ஆண்டில் பல்வேறு நேரங்களில் அத்தியாவசிய மருந்துகள் தீர்ந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கூடுதலாக, பல பொது மருத்துவமனைகள் இயந்திர பராமரிப்பு, பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் தேவையான இரசாயனங்களின் குறைந்த விநியோகம் போன்ற சிக்கல்களால் ஆய்வக சோதனைகளை நிறுத்த வேண்டியிருந்தது. நாட்டின் விநியோகத்தில் 80% பங்கு வகிக்கும் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளின் பற்றாக்குறை குறிப்பாக கவலையளிக்கிறது.

இலங்கையில் மருத்துவத் துறையின் தோல்விகள் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளன. அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், நிலைமை மேலும் மோசமடையும்.

எழுத்து:- ஏஞ்சலா பிரணவி அன்செல்மோ

ஹைனா எனப்படும் கழுதைப்புலிகள் மீதான தவறான நம்பிக்கைகள்

“The Lion King “ தொடருக்குப்பின் ஹைனா எனப்படும் கழுதைப்புலிகள் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு அது பற்றி தேடவைத்ததென்னவோ விஜய்யின் லியோ திரைப்படம்தான் என்றாலும் மிகையில்லை. டிஸ்கவரி போன்ற அலைவரிசைகளில் , விகாரமான தோற்றத்துடன் , இறந்து அழுகிப்போன நிலையில் உள்ள மிருகங்களை கூட்டம்கூட்டமாக பிய்த்துத் தின்று நம்மையெல்லாம் அருவருக்கச் செய்யும் இந்த மிருகம் பற்றிய உண்மைத் தகவல்களைக் காட்டிலும் கட்டுக்கதைகளும் புரளிகளுமே அதிகமானோரிடத்தே பரவியுள்ளதெனலாம். பல்வேறு நாடுகளின் நாட்டார் கதைகளில் ஹைனா அதிபயங்கரமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.  ஹைனா கல்லறைகளில் இருக்கும் பிணங்களைத் தின்னும் விலங்கு  என்றுகூட ஒரு நம்பிக்கை உண்டாம்.  குழந்தைகளைக் கடத்திச் சென்று கொன்று தின்னும் விலங்கு என்றுகூட பல இனக்குழுக்கள் இன்றும்கூட நம்புகின்றனராம் . பல நாட்டார் கதையாடல்களில் துரோகத்துக்கும் முட்டாள்தனத்துக்கும் ஹைனா அடையாளமாக சொல்லப்படுகிறது. இந்த விலங்கை சூனியக்காரிகளோடு பிணைத்துப் பேசும் பல இந்திய நாட்டார் கதைகளும் உண்டு.  உண்மையில், ஹைனாக்களின்  தோற்றமும், சில செயற்பாடுகளும் இந்தப் பயங்களுக்கும் அருவருப்புக்கும் வித்திட்டிருக்கலாம்.

கழுதைப்புலிகள் ஆபிரிக்கக் கண்டத்தினையே தமது பூர்வீகமாக கொண்டிருந்தபோதிலும் உலகின் பல பாகங்களிலும் அவற்றின் வகையறாக்கள் வாழ்ந்துவருகின்றன என்பதோடு, அவை striped hyena (Hyaena hyaena), the brown hyena  (Parahyaena brunnea), the spotted hyena (Crocuta crocuta), aardwolf (Proteles cristata) என வகைபிரிக்கப்பட்டுள்ளன. இந்த நான்குவகைகளில் the spotted hyena (Crocuta crocuta) என்கிற வகையே மிகப்பெரியவை. வன விலங்குகளிலேயே சிங்கம் மற்றும் புலிகளைவிட தாடை பலம் அதிகம் இருக்கும் உயிரினம் என்றால் அது கழுதை புலிதானாம். இதனால்தான் எவ்வளவு பெரிய உயிரினம் இறந்துகிடந்தாலும் அதன் எலும்புகள் முதற்கொண்டு அனைத்தையும் கழுதைப் புலிகள் சற்றுநேரத்தில் தின்று தீர்த்துவிடுகின்றனவாம். இப்படி மற்றைய விலங்குகளின் எலும்புகளை நொடிப்பொழுதில் நொறுக்கிவிடுவதால் இவற்றுக்கு “Bone crushers” என்கிற பட்ட பெயரும் உண்டு .

இப்படி பலசாலியாக இருக்கும் கழுதைப்புலிகள் தாய்வழி சமூகத்தைச் சார்ந்தவைபோலும். ஏனெனில் கூட்டம் கூட்டமாக வாழும் இவை பெண் தலமைத்துவத்தினைக்கொண்டவை . கழுதைப் புலிகள் எழுப்பும் சப்தம் மனிதர்கள் விழுந்து விழுந்து சிரிப்பதுபோல இருந்தாலும், அவை மகிழ்ச்சியை வெளிப்படுத்த மட்டும் இவ்வாறு சத்தம் எழுப்புவதில்லையாம். இரையை கண்டுவிட்டால் தனது சகாக்களுக்கு தகவல் அளிக்க மற்றும் பயம், பதற்றம், கோபத்தை
வெளிப்படுத்த இவ்வாறு சப்தம் எழுப்புகின்றன என்பதோடு மற்றைய பெரிய விலங்குகள் தம்மைத்தாக்கவரும்போதும் அவற்றை எச்சரிப்பதற்காகவும் இவ்வாறு சிரிப்பது போன்ற ஒலியினை ஏற்படுத்துமாம் .
                                      பூனைக் குடும்பத்திற்கு நெருக்கமான இனம்தான் ஹைனா என்றாலும்கூட அதன் முகம் நாய் போன்ற அமைப்பினைக் கொண்டிருப்பதால் பலரும் அவற்றை நாய் குடும்பத்தினை சார்ந்த விலங்காக தவறாக கருதுவதும் உண்டு . கழுதைப்புலிகளின் வேட்டை முறைக்கு “Endurance hunt “ என்று பெயர். அதாவது, வேகமாக ஓடி இரையைப் பாய்ந்து பிடிப்பதோ, மறைந்திருந்து தாக்குவதோ இல்லாமல், துரத்தித் துரத்தி இரையைச் சோர்வுறச் செய்வது. இரை விலங்கு ஓரளவுக்கு மேல் சோர்ந்துவிடும். ஆனால், கழுதைப்புலிகள் விடாமல் சோர்வடையாமல் துரத்தும். ஓடி ஓடிக் களைப்படையும் இரைவிலங்கு, உயிர்போனாலும் பரவாயில்லை என்று சோர்ந்து நின்றுவிட அதன்பின் கொன்றுதின்னும் கழுதைப்புலி.  ஓடி முடித்ததும் உடலைக் குளிர்விக்க ஹைனாவின் நீண்ட மூக்கு உதவுவதாகவும், அதனால்தான் இவற்றால் உடனே உணவு உண்ண முடிகிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றின் விநோதமான முதுகு அமைப்பு, இதுபோன்ற நீண்ட வேட்டைகளின்போது ஆற்றலைப் பாதுகாக்க உதவுகிறது. எனினும், வேட்டையாடுகிற எல்லா தகுதிகளும் இருந்தாலும் கழுதைப்புலிகள் அவ்வளவு எளிதில் வேட்டையாடுவதில்லையாம். சிங்கமோ சிறுத்தையோ ஒரு இரையை வேட்டையாடும்வரையில்  அசராமல் காத்திருக்கும் இவை , சிங்கம் இரையை வேட்டையாடி வீழ்த்திவிட்டால் ஒருவித ஓசையை வெளிப்படுத்தி மொத்த கழுதைப்புலி குழுவையும் வரவழைத்துக்கொண்டு சிங்கத்தை சூழ்ந்து வெறுப்பேற்றும். ஹைனாக்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, சிங்கமோ சிறுத்தையோ வேட்டையாடிய இரையை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிட , அதன்பின்னர் மொத்த ஹய்னா கூட்டமும் குறித்த இறையினை உண்டு தீர்த்துவிடும் .
                       பொதுவாக, கழுதைப்புலிகள் இரவு நேரத்திலேயே தமக்கான இரையினை தேடிச் சென்று ,பொழுது விடிவதற்குள் தம் இருப்பிடத்துக்கு வந்துவிடும். அடர்ந்த காட்டுக்குள் இறந்து கிடக்கும் விலங்குகளைத் தேடிப்போகும் கழுதைப்புலிகள் ஒரு வாரத்திற்கு முன்பு இறந்து, அழுகி, புழுக்கள் நெளியும் உடல் பாகத்தைக்கூடத் தின்று தீர்க்கின்றனவாம் இவற்றின் ஜீரண மண்டலத்தில் மிக பயங்கரமான பாக்டீரியாக்கள், வைரஸ்களை எதிர்கொள்ளும் சக்தி இருப்பதால் எந்த வகை உணவை இவை சாப்பிட்டாலும் இதன் உடலுக்குக் எவ்வித பிரச்சினைகளும் வருவதில்லையாம். இதனால்தான் இவை “கானகத் தோட்டி” , என்றும்  “காட்டின் துப்புரவாளர்” என்றும் அழைக்கப்படுகின்றனவாம் . ஆண் கழுதைப்புலிகளுக்கும் பெண் கழுதைப்புலிகளுக்கும் உடலளவில் எந்த வேறுபாடுகளும் கிடையாது. ஆண் கழுதைப்புலிகளுக்கு இருப்பதைப் போன்ற ஆண் குறி போன்றதோர் அமைப்பு பெண் கழுதைப்புலிகளுக்கும் இருப்பதால் , நீண்ட நெடுங் காலமாக கழுதைப்புலிகள் “இருபால்” இன விலங்காகவே  கருத்தப்பட்டுவந்தது . இதற்குப் போலி ஆண் குறி என்று பெயர் (Pseudopenis). உடலோடு ஒட்டியிருக்க வேண்டிய பெண்குறி, ஹார்மோன் கோளாறால் , சில இன்ச் நீளத்துக்கு வெளியே நீண்டு காட்சி தரும். ஆணுறுப்பு போன்ற தோற்றம் மட்டுமல்லாமல், பெண்ணுறுப்புக்கு அருகில் போலி விதைப்பை (False scrotum) போன்ற ஓர் அமைப்பும் இருக்குமாம் . பெண் தன்னுடைய குட்டிகளைப் போலி ஆண் குறி வாயிலாகத்தான் பிரசவிக்க முடியும். முதல் குட்டியைப் பிரசவிக்கும் பெண் கழுதைப்புலிகளில் 15% இறந்துவிடுவதாக கூறுகின்றன ஆய்வுகள் . சில குட்டிகள் பிறக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்து விடுகிற சம்பவங்களும் நிகழ்கின்றனவாம். சில நேரங்களில் காயம் ஏற்படுகின்றன. இனப்பெருக்க நேரத்தில் மூன்றிலிருந்து நான்கு குட்டிகள் வரை ஈனப்படுகின்றன. பிறக்கும்போது மட்டும் கழுதைப்புலி இனத்திற்கு சவால் ஏற்படுவதில்லை, இணை சேர்ந்த பின்னும்கூட பெண் கழுதைப்புலிகளின் பெண் உறுப்பின் சிக்கலான அமைப்பால், ஆண் உயிரணுக்கள் சினைமுட்டையைச் சென்றடைய நீண்ட நேரம் பிடிக்கும் என்பதோடு , இந்தக்கால இடைவெளிக்குள் பெண்விலங்கு சிறுநீர் கழித்துவிட்டால் சிறுநீரோடு உயிரணுக்களும் வெளியேறிவிடும். ஏனெனில், பெண் கழுதைப்புலிகள் சிறுநீர் கழிக்க, இணைசேர, குட்டி போட எல்லாவற்றுக்குமே இந்த ஓர் உறுப்புதான் பயன்படுத்தப்படுகிறது போதாக்குறைக்கு இன்று மனிதர்களுக்கும் கழுதைப்புலிகளுக்குமிடையே ஏற்படும் மோதல்களினால் ஏராளமான கழுதைப்புலிகள் அழிக்கப்பட்டு வருவது அவற்றின் இருப்புக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

எழுத்து :- பிரியா ராமநாதன்

பெண்கள் ஏன் கோவில் கருவறைக்குள் நுழையக்கூடாது ?

இந்தியா இலங்கை மட்டுமல்ல இந்த உலகம் முழுவதிலுமே  இந்து சமய கோவில்கள் எத்தனையோ இருக்கின்றன. அந்த கோவில்கள் அனைத்திலும் ஆண்கள் மட்டுமே அர்ச்சகர்களாக  பூசாரிகளாக இருக்கின்றார்கள் . அவர்கள் மட்டுமே கருவறைக்குள் செல்லும் அனுமதி பெற்றவர்களாககவும்  காணப்படுகின்றனர் . இன்று  அனைத்து துறைகளிலும் பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். ஆனால் கோவில்களில் குருக்களாக இருப்பதற்கு பெண்களுக்கு மட்டும் ஏன் அனுமதி இல்லை? பெண்கள் யாரும் கோயில் கருவறைக்குள் நுழையமுடியாத சூழ்நிலை இன்றுவரை இறுக்கமாக கடைபிடிக்கப்படுவதன் பின்னணி என்ன ?

” கோவில்களின் தேசம் ”  என சிறப்புப்பெயருடன் திகழும் இந்தியாவில்  ,   ஆலய  நுழைவுப் போராட்டம்  தொடங்கி, பரம்பரை அர்ச்சகர்களின்  நியமனத்தைத் தடை செய்யும் போராட்டம் வரை தமிழ்நாடானது   கலாச்சாரப் போராட்டங்கள் பல கண்டபோதிலும் ,   கோயில்களில் பெண்களின் பங்கு என்பதும் , ஆகமக் கோயில்களில் பெண் அர்ச்சகர்களின்  நியமனம் என்பதும் இதுவரை பேசாப்பொருள்தான். கோவில் கருவறைக்குள் பெண்களின் நுழைவு என்பது  , பெண் ஏன் கோவிலில் அர்ச்சகராகவோ பூசகராகவோ இருக்கக்கூடாது என்பதுடன் தொடர்புபடுத்தி ஆராயப்படவேண்டியவொன்று .

    சபரிமலைபோன்ற கோவில்களுக்குள்  பெண்கள் நுழைவதற்குக்கூட  கட்டுப்பாடுள்ள நிலையில் , கோவில்களின் கருவறைக்குள் செல்ல வேண்டும் எனும் கோரிக்கையானது மதவாதிகளினால் மட்டுமல்ல , அடிப்படைவாத பெண்களால்கூட ஒப்புக்கொள்ளவியளவில்லை என்பதே யதார்த்தம் .   இதுநாள் வரையில் பெண்கள் ஏன் அர்ச்சகராகக் கூடாது என்ற கேள்வி பரவலாக எழவில்லை என்றாலும் தற்போது பெண்கள் அர்ச்சகராவது என்பது அவர்களது உரிமைக்கான பிரச்சனையாக சிலரால் பார்க்கப்படுகின்றது .

                       ஆகம விதிகளை கடைப்பிடிக்கும் கோயில்கள், கடைப்பிடிக்காத கோயில்கள் என பலதரப்பட்ட கோயில்கள் உள்ளன. காலங்காலமாக  சிவன் கோயில்களில் சிவாச்சாரிய குறுக்கல்களும் ,  வைணவ கோயில்களில் பட்டாச்சாரியார்களும்  அர்ச்சனை செய்வார்கள்.  சிவாச்சாரியார்களும் பட்டாச்சாரியார்களும் இல்லாத கோயில்களில் அர்ச்சனை செய்பவர்கள் பூசாரிகள். இவை சாதி மற்றும் குடும்ப உரிமை போன்றதொரு அமைவென்றாலும் தகும் . எனினும் இங்கேயிருக்கும் ஒரே ஒற்றுமை கருவறைக்குள் நுழையும் தகுதி அந்தந்த வகுப்பின் ஆண்களுக்கு மாத்திரமே இருப்பதாக கூறப்பட்டு வந்திருப்பதாகும்.

                         இந்துக் கோயில்களுக்கும் சிறுதெய்வ வழிபாடுகளுக்கும் இடையே நுணுக்கமான வேறுபாடு உண்டு. சிறுதெய்வ வழிபாடு நடைமுறையில் இருந்த அல்லது இருக்கின்ற  கோயில்களில் பெண்கள் பூசாரிகளாக இல்லாவிட்டாலும், சமயச் சடங்குகளில் முக்கியப் பங்குவகித்தனர். ஆனால், வேதங்களைப் படிக்கவும் ஆன்மீக ஞானம் பெறவும் தகுதியுடையவர்கள் பிராமண ஆண்களே எனப் பிராமணர்களுக்குள் பிடிவாதம் இருந்ததுபோலவே மற்ற சமூகத்தினரும் பெண்களைச் சமயச் சடங்குகள் ஆற்ற மறுப்புத் தெரிவித்தனர் என்பதே கசப்பான உண்மை .

                                                                                                                           பெண் கருவறைக்குள் நுழையவோ , அர்ச்சகராக இருக்க முற்பட்டாலோ ஏன் இத்தனை எதிர்ப்பு? மாதவிடாய் என்பது மட்டுமே காரணமாக இருக்க முடியாது. முதலாவதாக, யாகம் நடத்துபவருக்கும் ,  புரோகிதருக்கும் இடையே ஒரு சம்பிரதாயம் உண்டு. யாகம் நடத்துபவர் புரோகிதர் கையில் “கங்கணம் ” கட்ட வேண்டும். அந்த வகையில்ஒரு ஆண் ஒரு பெண் கையில் கங்கணம் கட்ட வேண்டும் என்றால், இருவரும் தம்பதியினராக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர் . அடுத்து, யாகம் முடிந்ததும் யாகத்தினை நடத்துபவர் புரோகிதருக்குச் “சம்பாவனை ” (பணம் )கொடுக்க வேண்டும். அப்படியிருக்க ஒரு பெண் புரோகிதர் சம்பாவனை பெற்றுக்கொள்வது என்பது ஒழுக்கக்கேடாகக் கருதப்படுமாம் கலாசார பார்வையில்!

                                                                                                                            பண்டைய காலத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் இருந்தபோதும் பொருளாதார வளர்ச்சி அடையும் எண்ணம் துளிர்த்தவுடன்,  ஆண்கள் பொருளாதாரத் தளத்தில் மட்டுமல்லாமல் சமய, ஆன்மிகத் தளத்திலும் அதிகாரம் செலுத்தத் தொடங்கினர்.      அதுமட்டுமன்றி , முன்பெல்லாம் பெண்கள் இளம் வயதிலேயே திருமணம் முடித்துக்கொடுக்கப்பட்டு குடும்பப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை இருந்ததால் பல ஆண்டுகள் தொடர்ந்து பயின்றால் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்கிற அந்த மனோநிலை இன்றுவரை தொடர்வதும் பெண் அர்ச்சகர்கள் உருவாகாமைக்கு ஓர் காரணமாகவும் சொல்லப்படுகின்றது .

                                                        வேத நூல்கள் உள்ளிட்ட  இந்து மத அடிப்படை நூல்களில் பெண்கள் அர்ச்சகர்களாகக் கூடாது என்னும் வரிகள் காணப்படவில்லை என்றே விவாதிக்கப்படுகின்றது . புராதன வேத காலங்களில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும்  வேதம் பயின்றனர். திருமணம் முடித்தோ அல்லது திருமணம் முடிக்காமலோ “பிரம்மவாதினி” எனும் பெண் பூணூல் அணிந்து வேதம் பயின்றதற்கான எடுத்துக்காட்டுகள் உண்டு .  வேத குருக்களாகப் பணியாற்றியதைத் தவிரவும் கோயில் விக்ரகங்களுக்கு முக்கிய அபிஷேகப் பூசைகளும் பெண்கள் செய்திருக்கின்றனர். என்கிற வாதங்கள் உண்டு. தமிழர் கொள்கைப்படி, உயிர்களிடையே பால் வேற்றுமை கருதப்படாமையால் ஆடவனைப் போலவே பெண்ணும் முக்திக்குத் தகுதி உடையவள் ஆகிறாள். ஆகவே, முக்தி சாதனமாகிய கோயில் வழிபாட்டிலும் பெண்ணுக்கு முழு உரிமை உண்டு. மேலும், திருப்பனந்தாள் சிவாலயத்தின் பெயராகிய தாடகையீச்சுரம் என்பது ஒரு பெண் வழிபட்ட சிறப்பைக் கொண்டதாக பெரிய புராணம் கூறுகின்றது .

அவ்வூர் அர்ச்சகர் பெண்ணாகிய தாடகை என்பவள் தன் தந்தையார் வெளியூர் சென்றிருந்தபோது, தானே சுவாமிக்கு அர்ச்சனை செய்துகொண்டிருந்தபோது ,  பூமாலையைச் சிவலிங்கத்தின் முடியில் அணிவிக்க எழுந்தபோது இடையில் இருந்த ஆடை நழுவவே, அதைத் தன் இரண்டு கைகளாலும் நழுவாது பிடித்துக்கொண்டபோது   இவளுடைய பக்திக்கு அருள்கூர்ந்த பெருமான், தம் முடியைச் சாய்த்து பூமாலையை ஏற்றுக் கொண்டு  தாடகைக்கு அருள் செய்தமையால் இத்தலத்திற்குத் தாடகையீச்சுரம் என்று பெயர் வந்ததாக பெரியபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .

மத நூல்களும் சம்பிரதாயங்களும் மனிதர்களால் அதிலும் குறிப்பாக அதிகாரம் கொண்ட ஆண்களால் உருவாக்கப்பட்டவையே . காலமாற்றத்திற்கு ஏற்ப அவை மாற்றம்   காண்பதென்பது  யாராலும்  தடுக்கவியலாதவொன்று  . இன்று இது அவசியம்தானா?  என யோசிக்கவைக்கும் பல விடயங்கள் நாளை அவசியமானதாகவோ அல்லது சாத்தியப்படும் ஒன்றாகவோ மாறக்கூடும் .      எது எப்படியோ கோவில் கற்பகிரகத்தினுள் நுழைய வேண்டும் என்பதோ , தானொரு அர்ச்சகராக வரவேண்டும் எனும் எண்ணமோ நம்மில் எத்தனை பெண்களுக்கு இருக்கும் என்று தெரியவில்லை . ஏனெனில் , கோவில் அர்ச்சகர் பணி என்பது பொருளாதார நோக்கத்தோடு நோக்கின் மிகப்பெரிய வருமானத்தினை கொடுக்கக்கூடிய ஒன்றல்ல . ஆக, நம் பெண்கள் அதற்காக கடினப்பட்டு படித்து முடித்து அந்த பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வார்களா என்றால் , அந்த எண்ணிக்கை மிக சொற்பமாகவே இருக்கும் . (ஒரு காலகட்டம்வரையில் இறை பணி என்பது ஆன்மீகம் என்ற நிலையில் இருந்தது இன்றோ எல்லாம் வணிக மயம் என்கிற நிலையில் )

எழுத்து :- பிரியா ராமநாதன்

அண்மைய வரலாறு காணாத புலம்பெயர்விற்கு காரணம் என்ன ?

ஓர் வரலாறு காணாத புலம் பெயர்வு தற்போது இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என்றால் மிகையாகாது . நாட்டில் யுத்த சூழ்நிலை நிகழ்ந்துகொண்டிருந்தபோதுகூட இந்த அளவு புலம்பெயர்வு இடம்பெற்றிருக்கவில்லை என்பதே உண்மை  . அதிலும் குறிப்பாக புத்தி ஜீவிகளின் இடப்பெயர்வு .

 என்னென்ன காரணங்கள் மக்களை தற்போது இப்படியான புலம்பெயர்வுக்கு சரவாரியாக  இட்டுச் செல்கின்றது என சற்று நோக்குவோமாயின்

நாளை என்ன நடக்கும்” ? என்கிற நிச்சயமற்ற தன்மையானது அண்மைய காலத்தில் முன்பைக்காட்டிலும் அதிகமாகவே மக்களது மனதில் எழுந்து ஒருவித அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது . பொருளாதார ரீதியிலும் சரி , அரசியல் ரீதியியலும் சரி மக்களது அதிருப்தியானது இந்த நாட்டைவிட்டு போனால் போதும் என்கிற எண்ணத்தினை விதித்துள்ளது  எனலாம்

எந்தவித பொருளாதார மீட்சியும் இல்லாமல் நாடு தொடர்ந்தும் கடன் வாங்கிக்கொண்டிருக்கும் நிலையில் , இந்த கடன் சுமையானது எதிர்காலத்திலும் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லாது என்பதுடன் , இலங்கை அரசியல்வாதிகளின் சிந்தனை மற்றும் நடவடிக்கைகளின் மீதுள்ள அதிருப்தி மற்றும் நம்பிக்கையீனம் , மீண்டும் மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினரே ஆட்சிக்கு வரலாம் என்கிற அச்சம் போன்றவையும் இவ்வாறான புலம்பெயர்வுகளுக்கு காரணம்

 சம்பள உயர்வு இல்லாத இக்காலகட்டத்தில் , அதிகரித்திருக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் , அதிகப்படியாக அறவிடப்படும் வரி போன்றன மக்களை மிகப்பெரிய அழுத்தத்திற்கு கொண்டு சென்றுள்ளது . மக்களின் கொள்வனவு சக்தியானது கடந்த காலங்களைவிட சடுதியாக குறைந்துள்ளது  .  தம்முடைய வாழ்க்கைத்தர வீழ்ச்சியினை ஏற்றுக்கொள்ள விரும்பாத பலரும்கூட வேறு நாடுகளுக்கு செல்லத்தொடங்கியுள்ளனர் , குறிப்பாக வைத்தியர்கள் உற்பட்ட சமூக அந்தஸ்துள்ளவர்கள் தமது உழைப்புக்கேற்ற வாழ்க்கைத்தரமானது இலங்கையில் கிடைக்காதபோது , சர்வதேச சந்தையில் அவர்களுக்கு இருக்கும் டிமாண்ட் அதிகம் என்பதை கருத்திற்கொண்டு பெருவாரியாக  வெளியேறிக்கொண்டிருக்கின்றார்கள்

கடந்தவருடத்தினைப்போலவே  ஒரு மிகப்பெரிய பொருளாதார தட்டுப்பாடு , அதனால் ஏற்பட்ட அசவுகர்யங்கள், மரணங்கள் போன்றவை இனியும் நிகழாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்கிற அச்சம் , மற்றும் தற்போது நமது சுகாதாரத் துறையில் , நீதித்துறையில் ஏற்பட்டுள்ள சீரழிவானது தம்முடைய பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும் என்கிற அச்சம் போன்றவையும் மக்களை வேறு நாடுகளுக்கு செல்லவைத்துக்கொண்டிருக்கின்றது

மேலும் தமிழ் மக்களை பொறுத்தவரையில் வெளிநாட்டில் உள்ளவர்கள் பொருளாதார தன்னிறைவு மற்றும் பாதுகாப்புடன் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள் என்கிற மனோநிலை அதிகமாக காணப்படுவதால் , தற்போதைய இலங்கை நிலைமையினை காரணமாக வைத்துக்கொண்டு புலம்பெயர்பவர்களும் அதிகம்

திடீரென அதள பாதாளத்திற்கு வீழ்ச்சியுற்ற இலங்கை நாணயப்பெறுமதியும் புலம்பெயர்விற்கு வித்திட்டதெனலாம். அதாவது , முன்பு வெளிநாட்டிலிருந்து உழைத்தனுப்பும் பணமானது தற்போதைய இலங்கை நாணய பெறுமதி வீழ்ச்சியினால் சடுதியாக இரண்டு மூன்று மடங்குகளாக அதிகரித்துள்ளமை , வீட்டுக்கு ஒருவராவது வெளிநாடு சென்றால் நல்லது என்கிற நிலையை தோற்றுவித்துள்ளது

இவை எல்லாவற்றையும்விட இன்னுமொரு காரணம்தான் , ” பதற்றப்படுத்தல்என்பது . தமக்கு அறிந்தோர் தெரிந்தோரெல்லாம் நாட்டைவிட்டு வெளியேறுகையில் தாமும் செல்லவேண்டும் என்கிற உந்துதலுக்கு அல்லது பதற்றப்படுத்தலுக்கு உள்ளாகும் மனோநிலை ஒருபோதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது . கொரோனா காலத்தில் எப்படி ஒருவித பதற்றத்துடன் முட்டிமோதி சூப்பர் மார்க்கெட்டுக்களில் இருந்து பொருட்களை வாங்கி பதிக்கினோமோ அதேபோன்றதொர் பதட்ட நிலை என்றுகூட கூறலாம்

எழுத்து :- பிரியா ராமநாதன்

“3rd world largest hotel chain” இந்த Oyo தான் தெரியுமா ?

சுற்றுலா செல்லும் பலரும் இலங்கையின் பல பாகங்களிலும் குறிப்பாக நுவரெலியா போன்ற சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்திழுக்கக்கூடிய பெரு நகரங்களில் அடிக்கடி கண்ணில் படும் விளம்பர பதாகைகள்தான் ஒயோ ரூம்ஸ் . உலகின் மிகப்பெரிய தங்குமிட வசதிகளை செய்துகொடுக்கக்கூடிய இந்த ஒயோ ரூம்ஸ் இலங்கை பிரஜை யாருடையதுமா ? அல்லது வெளிநாட்டினருக்கு சொந்தமான நிறுவனமா ? வாருங்கள் அதன் உருவாக்கத்தைக் கொஞ்சம் பார்த்துவிடுவோம்?

                                          கல்லூரிப் படிப்பினை வெறும்பாதியில் விட்டுவிட்டு ,  19 வயதிலேயே தன்னுடைய ஹோட்டல் பிசினஸ்சினை தொடங்கி , 22 வயதில் மில்லியனராகிஐந்து வருடங்களிலேயே “3rd world largest hotel chain” என்கிற பெருமைக்கு சொந்தக்காரராகி, இந்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்  !  ஒரு நாளில் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட மூன்றரை  லட்சத்திற்கும் அதிகமானோர்  இவரது ஹோட்டல்களில் தங்குகின்றனராம்   . இவர்தான் “Oyo rooms” நிறுவனர்  ரித்தேஷ் அகர்வால் !

          

         யார் இந்த  ரித்தேஷ் அகர்வால் ? இந்தியாவில் நக்ஸல்ஸ் நடமாட்டம் அதிகமுள்ள ஒரிசாவில்பிஸ்ஸம் கட்டாக்“. என்கிற ஓர் சிற்றூரில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்தான் ரித்தேஷ் .ஒருநாள் ரித்தேஷ் பாடசாலையில் இருந்து திரும்பும்போது , அவரது அக்கா ஒரு கருத்தரங்கிற்கு சென்றுவிட்டு வந்திருந்தார் . எங்கே போனாய் என ரிதேஷ் கேட்க , “நான் entrepreneur festival போனேன்என்றாராம் அக்காஅப்படியென்றால் என்ன என Google செய்து பார்த்திருக்கின்றார் அந்த பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவனான ரிதேஷ் . அந்த வார்த்தைக்கு அப்போது அவருக்கு அர்த்தம் புரிந்ததோ இல்லையோ ஆனால் அதன்மீது பெரும் ஈர்ப்பிருந்தது .சில நாட்களின்பின் பாடசாலையில், ஆசிரியர் மாணவர்களிடம் எதிர்காலத்தில் நீங்கள் எல்லோரும் என்னவாக ஆசை என கேற்க , வழமைபோல் அவர்களும் டாக்டர் என்ஜினீயர் , வக்கீல்போலீஸ் என சொல்லிக்கொண்டே செல்ல ரிதேஷ் மட்டும் entrepreneur என கூற , அடுத்த நொடியே எல்லோரது பார்வையும் ரிதேஷ் மீது பதிய , அந்த வினாடிகள்தான் பின்னாளில் கண்டிப்பாக  தான் ஒரு தொழில் முனைவோனாக வரவேண்டும் என்கிற எண்ணத்தினை விதையுரைச் செய்ததாம்  ரித்தேஷிடம்

      ஆசைப்பட்டது மட்டுமன்றி தனது பதின்மூன்றாவது வயதிலேயே sim card விற்று அதில் ஓரளவு லாபமும் ஈட்டியுள்ளார் . ராஜஸ்தானில் உள்ள கோட்டா உயர் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது , ஒவ்வொருவாரமும் டெல்லிக்கு பயணமாகி , அங்கு எங்கெல்லாம் “entrepreneur festival”  நடக்கின்றதோ அங்கே சென்றுவிடுவார் .அதில் கலந்துகொண்டு ஒவ்வொரு தொழில் முனைவோரின் மற்றும் பிசினஸ் செய்வோரின் வெற்றிக் கதைகளை கேட்டுக்கொண்டிருப்பார் . அந்த entrepreneur success stories ஒவ்வொன்றும் ரித்தேஷ் மனதில் ஆழமாய் பதிய அவர் ஒன்றை புரிந்துகொள்கின்றார் , நடப்பில் உள்ள கல்வித் திட்டமானது நடைமுறை வாழ்கைக்குத் தேவையான எல்லாவற்றையுமே கற்றுக்கொடுக்கப்போவதில்லை என்பதை . அதன்பின்னர்  டெல்லியிலேயே  அதிக நாட்களை செலவிட்ட ரித்தேஷ் பரீட்சை காலத்தில் மட்டும் கல்லூரிக்கு சென்று தேர்வுகளை எழுதிவிடுவார் . இடையிடையே ஏதாவது பகுதிநேர வேலை பார்த்து அந்த பணத்தில் பல இடங்களுக்கு பயணமானார் . இந்த பயணங்கள் மூலமாகவே அவர் நிறைய வாழ்க்கைப் பாடங்களை கற்றுக்கொண்டார் .உத்தரகாண்டம் முதல் இமாச்சலம் வரை ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட நூறு இடங்களுக்குமேல்  பயணமாணவர் , இருநூற்றுக்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் தங்கினார் . இம்மாதிரியான பயணங்களின்போது  தங்குமிடங்களில் அவர் ஓர் விடயத்தினை அவதானித்தார் . சில ஹோட்டல்களில் வழங்கப்படும் சேவை தரமானதாக இருக்கும் , ஆனால் அங்குள்ள அறைகள் எல்லாமுமே நிரம்பியிராதுசில ஹோட்டல்களில் சேவை படுமோசமாக இருக்கும் எனினும் எல்லா அறைகளும்  புக் செய்யப்பட்டிருக்கும் . இந்த பிரச்சினைக்கான காரணமோ தீர்வோ  அப்போது அவருக்கு புரிந்திருக்கவில்லை .      

                  இம்மாதிரியான நிறைய பயணங்களை மேற்கொண்டவாறே ஒவ்வொரு ஊரிலும் உள்ள என்ஜினீயர் கல்லூரிகளை ஆராச்சி செய்து  புத்தகமொன்றினையும்  தனது பதினேழாவது வயதில் எழுதிமுடிக்கின்றார் . “இந்த வயதில் பிசினஸ் வேண்டாம் படிப்பை தொடர்என்ற பெற்றோரின் வற்புறுத்தலால்  படிப்பை தொடர்ந்தாலும் ,பயணங்கள் மேற்கொள்வதை அவர் நிறுத்தவில்லை . அப்போதும், நல்ல ஹோட்டல் சேவை  கிடைக்காமல் அவதியுறுகின்றார்  . ஆகவே இந்த பிரச்சினைக்கு நாம் ஏன் ஓர் தீர்வுகாணக்கூடாது ? என எண்ணி “Oravel stays ” என்கிற இணைய தளத்தினைனை ஆரம்பித்தார் . Oravel என்றால் என்னவென்றால் பயணிகளுக்கு குறைந்த பட்ஜெட்டில் அப்பார்ட்மென்ட்களில் இரவு தங்க ஒரு கட்டில் ,மற்றும் காலை உணவு . எனினும் அவர் எதிர்பார்த்ததைப்போல் இந்த பிசினஸ் வெற்றியளிக்கவில்லை 

           இந்த காலகட்டத்தில் அவர் “thiel fellowship”பற்றி கேள்விப்படுகின்றார் . Peter thiel , இவர் யார் என்றால் ” PayPal ” நிறுவனத்தின் founderகளுள் ஒருவர் , மேலும் mark Zuckerberg Facebook நிறுவனத்தினை ஆரம்பித்தபோது , அது கண்டிப்பாக வெற்றியடையும் என அதில் நிறைய முதலீடுகளை செய்தவர் . Peter thiel அவர்களுடையதுதான் இந்த “thiel fellowship” . உலகத்தில் உள்ள இருபதுபேருக்கு நேரடியாக பயிற்சி கொடுப்பதோடு , ஏதாவது பிசினஸ் செய்ய அல்லது வித்தியாசமான அவர்களது 

ஐடியாக்களை பரீட்சித்துப்பார்க்க ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பணமும் கொடுப்பார்கள் . ஆனால் , இதில் சேரவேண்டும் என்றால்  இரண்டு கண்டிஷன்கள் உண்டு முதலாவது , விண்ணப்பிப்பவர் இருபது வயதுக்குள் இருக்கவேண்டும் ( இப்போது இது இருபத்தியிரண்டு வயதாக மாற்றப்பட்டுள்ளது ) மற்றையது  ஸ்கூல் அல்லது கல்லூரி முடித்திருக்கவேண்டும்

    இதுபற்றிய விடயங்களை கேள்விப்பட்ட ரித்தேஷ் விண்ணப்பிக்க நினைத்தபோது ஒரு பிரச்சினை என்னவென்றால் அன்று ஜனவரி 1 , ஆனால் , விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி டிசம்பர் 31 . அடுத்தநாள் தானாகவே இணையத்தில் இருந்து அந்த விண்ணப்பப்படிவம் நீங்கிவிடும் வகையிலேயே அமைந்திருக்கும்   . ஆனால் ரிதேஷின் அதிர்ஷ்டம் அவருக்கு கைகொடுத்தது , ஏனெனில்  IST அதாவது இந்திய நேரத்தின்படி அன்று ஜனவரி 1 , ஆனாலும் சான்பிரான்சிஸ்கோவில் PST, அங்கு இன்னும் டிசம்பர் 31 . விடுவாரா ரித்தேஷ் மளமளவென்று படிவத்தினை நிரப்பியனுப்பி , நேர்முகத் தேர்வுகளிலும் கலந்துகொண்டு அதில் தேர்வாகியும் விடுகின்றார் . Peter thielலிடம் நேரடியாக பயிற்சிபெற்றுக்கொள்ளும் ரிதேஷ் , அதே உற்சாகத்துடன் இந்தியா திரும்பிவருகின்றார் தொழில் தொடங்க . இந்தியாவில் பட்ஜட்டுக்கு  ஏற்ற தங்குமிடவசதி கிடைப்பதில் சிரமம் இருப்பதனை உணர்ந்திருந்த ரித்தேஷ் இதற்கான  தீர்வாக ” Oyo rooms ” என்ற startup may 2013 ல் தொடங்குகின்றார்  . 

  

      இணைய பக்கத்தில் காட்டப்படும் விடுதியே நேரிலும் இருக்கும் என நூறுவீதம் உறுதியாக கூறவியலாது . இந்தியாவில் அறைகளை தேர்வு செய்ய உதவும் இணையதளங்கள் தரத்திற்கான உத்தரவாதத்தினை அளிப்பதில்லை . அதற்கான உத்தரவாதத்தினை சுற்றுலா செல்வோரிடம் வழங்குவது எப்படி ? யோசித்த ரித்தேஷ் , தங்குமிடங்களை புக் செய்வோர் சந்திக்கும்  இடர்களை களைந்து  வரைமுறைப்படுத்தி வலைத்தளம் மூலம் சென்றடையச் செய்தால் வெற்றி பெறலாம் என எண்ணி தனது Oravel பக்கத்தினையே ” Oyo rooms” என பெயர் மாற்றம் செய்து புது வடிவம் கொடுத்தார் .      

        விடுதிகளுடன் கைகோர்த்து இந்தியாவின் அனைத்து  நகரங்களிழும் Oyo rooms புக் செய்வோருக்கு பஜட் விலையில் சேவையினை வழங்குவது இதன் நோக்கம் .ஹரியானாவின்  குர்கான் பகுதியில் உள்ள ஒரேயொரு ஹோட்டலுடன் செயற்பட ஆரம்பித்த Oyo தற்போது இந்தியாவின் 260 நகரங்களில் 8500 ஹோட்டல்களுடன் இணைந்து சுற்றுலாவாசிகளுக்கு சேவையினை வழங்குகின்றது . Oyo  என்பதன் அர்த்தம்  “on your own room” என்பதாகும்  .  

நமது விருப்பத்திற்கேற்ப ஓன்று என்ற சிந்தனையின்  மூலம், ” டிவி ரிமோர்ட்என்று இவர்கூறுவது சிறுபிள்ளைத்தனமாகக்கூட பலருக்கு தோன்றக்கூடும்  . ஏனெனில் ,ஒருசமயம் உறவினர் ஒருவரது வீட்டிற்கு சென்றிருந்தாராம் ரித்தேஷ் , அப்போது அங்குள்ளவர்கள் டிவியில் சீரியல் பார்த்துக்கொண்டிருக்க தனக்கு கார்ட்டூன் பார்க்கவேண்டும் போலிருந்ததாம் . எனினும் விருப்பத்திற்கேற்ப சேனலை மாற்ற ரிமோர்ட் என்னிடம் இல்லையே என கவலைகொண்டாராம் . இதே பார்முலாவைத்தான் சுற்றுலா செல்லும்போது பயணிகளின் பஜற்றுக்கு ஏற்ற தேர்வு மற்றும் சேவை என்பதிலும் பயன்படுத்தினார் ரித்தேஷ்  . 

                Oyo ஆரம்பித்ததும் எடுத்த எடுப்பிலேயே முதலாளி என்ற பந்தா காட்டாது , களத்தில் இறங்கி வேலை பார்த்தார் ரித்தேஷ் . அறையினை சுத்தம் செய்வது முதல் , வரவேற்பரையில் நிற்பது என எல்லாவற்றையுமே ஆரம்பத்தில் செய்தார் . ஒருமுறை ஒரு தம்பதியினர் தமது குழந்தையை இவரிடம் ஒப்படைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டனராம் . இவரது நல்லநேரம் குழந்தை அழாமல் இவரிடம் சமத்தாக இருக்க திரும்பிவந்த பெற்றோர் இவர்தான் Oyo CEO என்பதை அறியாததால் 50 ரூபாய் டிப்ஸ் கொடுத்துவிட்டு சென்றனராம் .         வாடிக்கையாளர்களிடம் நெருங்கிப்பழகியதால் அவர்களது விருப்பு வெறுப்புகளை நன்கு அறிந்துகொண்டு  oyoவை மென்மேலும் வளர்ச்சியுரச் செய்யமுடிந்தது . இந்த பத்து  வருடங்களில் 5700கோடி ஆண்டு வருமானம் ஈட்டி வரும் ஒயோவின் founder இத்தனையையும் தன்னுடைய இருபத்துநான்கு வயதுக்குள் சாதித்தார் . சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை சாதிக்கவேண்டும் என்கிற அந்த உத்வேகம் இருந்தால் மட்டும் போதும் என்பதைத்தான் ரித்தேஷின் கதை நமக்கு கூறுகின்றது . இன்று உலகின் பல நாடுகளிலும் Oyo செயற்படுகின்றது .2020ல்  Oyoவின் மொத்த சொத்து மதிப்பு 1.1  பில்லியன் அமெரிக்க டாலர் . 2020பெப்ரவரி வரையில் உலகின் சுய தொழிலுக்கான பில்லியன் சொத்துமதிப்புள்ள இளம் தொழிலதிபர் என்கிற பெயரினை தக்கவைத்திருந்தார் ரித்தேஷ்

                   “ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்பதுபோல் படிப்பு என்பது பல்கலைக்கழகத்தோடு முடங்கிவிடும் ஓர் விடயம் அல்ல . பட்டம் பெறாமலேயே சாதிக்கலாம் , வெற்றியை இலக்காக நிர்ணயிப்பவர்கள் அதற்காக முழுமனதோடு செயற்பட்டால்”  எனக்கூறும் ரித்தேஷ் இன்றைய இளம் தலைமுறை தொழில் முனைவோர்க்கான ஓர் சாதனை நாயகன்தான் இல்லையா ?

     எழுத்து – பிரியா ராமநாதன் 

IFFKவில் திரையிடப்படும் இலங்கையின் ‘எல்லையற்று விரிகிறதோர் இரவு’


International Documentary & Short Film Festival of Kerala என்பது இந்தியாவின் கேரளாவில் நடக்கும் ஓர் முக்கியமான திரைப்படவிழா ஆகும். இந்த திரைப்படவிழா கடந்த பதினைந்து ஆண்டுகளாக கேரளாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதோடு, International Film Festival of Kerala (IFFK) திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக குறும்படம் மற்றும் ஆவண படத்துக்கு என்றும் விருதுகள் வழங்கப்படும். International Film Festival of Kerala (IFFK) என்பது இந்தியாவில் இருபத்தேழு ஆண்டுகளாக நடைபெறும் இரண்டாவது முக்கியமான ஒரு திரைப்பட விழா என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நடந்த IFFKவில் ஹங்கேரி நாட்டை சேர்ந்த, உலக சினிமாவில் மிக முக்கிய பங்கு ஆற்றிய பேலா டார் (Bela Tarr) கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

International Documentary & Short Film Festival of Keralaவில் வெவ்வேறு பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் வருடந்தோறும் கலந்து கொள்கின்றன. அதில் சர்வதேச பகுதி (International Section) என்பது இந்தியா அல்லாத மற்றைய நாட்டு குறும்படங்கள் கலந்து கொள்ளும் பகுதியாகும். இந்த வருடம் பதினைந்தாவது International Documentary & Short Film Festival of Keralaவில், ஐம்பத்தி மூன்று குறும்படங்கள் தெரிவுசெய்யபட்டுள்ளன. அதில் அமெரிக்கா, ஈரான், சீனா, இஸ்ரேல், ஹங்கேரி, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் பல நாடுகளின் படங்களுடன், இலங்கை சார்பாக “எல்லையற்று விரிகிறதோர் இரவு” என்கிற குறும்படமும் தெரிவாகியுள்ளது.
இக் குறும்படத்தை முல்லைத்தீவு, முள்ளியவளையில் வசிக்கும் வேல்ராஜா சோபன் என்பவர் எழுதி தயாரித்து இயக்கியுள்ளார். இந்த குறும்படம் மிக சொற்பமான பொருட்செலவுடன், சில நண்பர்களின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்டது. எதிர்வரும் ஆகஸ்ட் நான்காம் திகதி கேரளாவில் உள்ள KAIRALI SREE NILA திரையங்கில், காலை பதினொரு மணிக்கு International Documentary & Short Film Festival of Kerala சார்பில் திரையிடப்பட இருக்கிறது.

Director – வேல்ராஜா சோபன்



இந்த குறும்படம் வேலை முடிந்து இரவில் கணவனுக்காக வீதியில் காத்திருக்கும் ஒரு பெண்ணுக்கு நடக்கும் மனதளவிலான பாதிப்புகள் பற்றியது. இந்த குறும்படத்தில் இராசையா லோகாநந்தன், செல்வராஜ் லீலாவதி மற்றும் ஜெனோஷன் ஜெயரட்ணம் முக்கிய காதாபாத்திரங்களாக நடித்து இருக்கிறார்கள். ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு மற்றும் உதவி ஒளிப்பதிவாளராக திலீப் லோகநாதனும், உதவி இயக்குனர் மற்றும் இணை எழுத்தாளராக புவனேஷ்வரன் பிரஷாந்த என்பவரும், இரண்டாவது உதவி இயக்குனாராக Rj பெனயா என்பவரும், கள உதவியாளராக காந்தரூபன் மற்றும் கிரிஷாந் ஆகியோரும், Foley & Sound Mix புவனேந்திரன் பிரணவனும், கள ஒலிப்பதிவை வாகீசனும் செய்திருக்கிறார்கள்.

ஆண்டுதோறும் பல படைப்புகள் இலங்கையில் வெளிவந்த வண்ணமாய் இருந்தாலும், சர்வதேச அளவில் எமது மண்ணின் படைப்புகளை கொண்டு சேர்த்த “எல்லையற்று விரிகிறதோர் இரவு” (A NIGHT EXPANDS INTO THE INFINITE) திரைப்பட குழுவுக்கு நாடியின் வாழ்த்துக்கள்!

Source – Priya Ramanathan

இம்மாதம் முதல் Pick Me சேவை யாழ்ப்பாணத்தில்

மிக நீண்ட சாலைகளை இணைக்கும் போக்குவரத்து சாதனம் ” pick me “. கூப்பிட்ட குரலுக்கு வீட்டு வாசலுக்கே வந்து நிற்கும் , பிக்கப் & ட்ரோப் என்கிற இந்த இரண்டு வார்த்தைகளுக்குமான முழு முகவரியையும் விரிவாய்த் தரும் google map ,சொந்தக் காசை முதலீடாக்கி ,ஆட்டோ அல்லது கார் வாங்கி நம்மை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் ஓட்டுனர்கள் !

ஆம் , பேரூந்துக்கட்டண உயர்வு , அரச மற்றும் தனியார் போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்தும்போது ஏற்படும் அசௌகரியங்கள் , குறித்த நேரத்தில் அவற்றை பயன்படுத்தமுடியாமை போன்ற காரணங்களால் pick me மீது மக்களின் பார்வை திரும்பி சில காலமாயிற்று என்றேகூட சொல்லலாம் .வெகுஜன மக்களின் பயணநேரம் , இருக்கை வசதி , Ac உற்பட அனைத்தையும் கொடுத்து குறைந்த கட்டணத்தில் வாருங்கள் பயணிப்போம் என வரிசை கட்டி நிற்பதுடன் , மக்களும் அந்த சௌகரியங்களை விரும்புவதால் இந்த Pick me செயலியானது இன்று அநேகரது கையடக்கத் தொலைபேசிகளிலும் இடம்பிடித்திருக்கும் ஓர் முக்கிய செயலி என்றாலும் மிகையில்லை
.
Pick Me செயலியின் செயற்பாடானது இலங்கையின் பிரதான நகரங்கள் பலவற்றில் காணப்பட்டபோதிலும் , யாழ்ப்பாணத்தில் இம்மாதம் முதலே ( ஓகஸ்ட் முதலாம் திகதி) வாடகைக்கு வாகனங்களை அமர்த்தி பிரயாணங்களை மேற்கொள்ள முடியும் என Pick Me செயலியின் வடமாகாண முகவர் தவதீஸன் யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார் . மேலும் இவரது கூற்றின்படி ஜனவரி மாத ஆரம்பத்தில் இருந்து இதற்கான பரிட்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தபோதிலும் , அதற்கான உரிய வரவேற்பானது கிடைக்கப்பெறாமையினால் , இடைநிறுத்தப்பட்டு மீண்டும் பல நல்ல திட்டங்களை உள்ளடக்கியவகையில் இம்மாதம் முதல் Pick Me செயலியை பொதுமக்கள் பயன்படுத்த முடியும் என மிகவும் மகிழ்ச்சியுடனும் , ஆர்வத்துடனும் எம்மோடு கருத்துக்களை பகிர்ந்துகொண்டிருந்தார் .

முச்சக்கர வண்டி மற்றும் கார் சாரதிகள் தங்கள் வாகனங்களை வாடகைக்கு அமர்த்துபவர் என்றால், குறித்த செயலி மூலம் இலவசமாக பதிவு செய்துகொள்ள முடியும் எனக்கூறும் தவதீஸன்,
பதிவு செய்துகொள்வதற்காக வாகனத்தின் முன் மற்றும் பின் பக்கம் , கரை பக்கம் மற்றும் உற்புறம் தெளிவாகத் தெரியும் வகையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் , தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், வாகன வரி பத்திரம், வாகன காப்புறுதி பத்திர புகைப்படம், சாரதியின் புகைப்படம் போன்றவற்றை வட்ஸப் (WhatsApp) மூலம் அனுப்பிவைக்கப்படும்போது , அவை நிறுவனத்தினால் உரியமுறையில் பதிவேற்றப்பட்ட பின்னர் சாரதிகளுக்கு ஒரு செயலி வழங்கப்படும். அதில் அவர்களுக்கான இரகசிய குறியீட்டின் மூலம் ஒன்லைனில் இருந்தால் போதும். ஓட்டுனர்கள் தங்களுக்கான சவாரி கிடைக்கும் வரையில் பாதையோரம் காத்திருக்கவேண்டிய தேவையும்கூட இனியிராது , அவர்களது வீட்டில் இருந்தவாறே செயலியின்மூலம் சவாரி கிடைக்கும்போது கடமைக்கு சென்றால் போதுமானதாக இருக்கும் . அதுமட்டுமன்றி வாகன உரிமையாளர்களுக்கு இது ஒரு மேலதிகமான வருமானமாகவும் நிச்சயம் இருக்கும் .
பொதுமக்கள்,வாடிக்கையாளர்கள் சாரதிகளிடம் தாம் செல்லவேண்டிய இடத்தை செயலி மூலமாக முன்பதிவு செய்துகொள்ள முடியும் .
(சாரதிகள் வாகனங்களை பதிந்துகொள்ள 0774737737,
070 374 4444 இலக்கம் மூலமும் வட்ஸப் மூலமும் தொடர்புகொள்ளலாம்)

சாரதிகளாக கடமையாற்ற முன்வருபவர்களுக்கு pick me நிறுவனத்தின் மூலம் பல சலுகைகள் வழங்கப்படும் எனக்கூறும் தவதீஸன் , தினசரி நிரந்தர வருமானம் என்பது இந்த செயலியினால் நிச்சயம் கிடைக்கும் என்பதுடன் , கடமையில் இருக்கும் ஓட்டுநர் விபத்தினால் இறந்தாலோ அல்லது நிரந்தர உடல் ஊனம் ஏதேனும் ஏற்படுமாயின் நிறுவனத்தினால் மூன்று மில்லியன் ரூபாய் காப்புறுதி வழங்கப்படும் அதேவேளையில் , விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு ஓட்டுநருக்கான தினசரி காப்பீடாக ரூபாய் மூவாயிரம் ( மொத்த மருத்துவ காப்பீட்டுத்தொகை ரூபாய் முப்பதாயிரம் ) வழங்கப்படும் .
ஆட்டோவிற்காக காத்திருந்து , பேரம் பேசி செல்லவேண்டிய தேவையோ அல்லது குறிப்பிட்ட தூரத்தை கடந்த பின்னர் இவ்வளவு வேண்டும் அல்லது இவ்வளவுதான் கொடுப்போம் என்கிற ஓட்டுனர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்குமான முரண்பாடோ இனி ஏற்படப்போவதில்லை pick me செயலியினால் . வழமையாக ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு அதிகப்படியாக கொடுக்கவேண்டியிருக்கும் நிலமையில் , pick me பயன்பாடானது நுகர்வோருக்கு மிக குறைந்த செலவில் சேவையினை வழங்கக்கூடிய ஓன்று என்பதுடன் , பாதுகாப்பு என்பது இந்த செயலியின் மூலம் நூறுவீதம் உறுதிப்படுத்தப்பட்டது . இந்த செயலியில் உள்ள SOS button GSP சிஸ்டம் மூலம் வாடிக்கையாளர்களது பாதுகாப்பு மட்டுமன்றி ஓட்டுனர்களது பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது விசேடமான ஓன்று .

எழுத்து : பிரியா ராமநாதன்

வானொலியை கண்டுபிடித்தது மார்க்கோனி இல்லையா ?

 

வானொலியை கண்டு பிடித்தவர் யார் என்றால் நாம் சட்டென்று சொல்லிவிடுவோம்வில்லியம் மார்க்கோனிஎன்று ..மின்சாரத்தை கண்டுபிடித்த பெருமை யாருடையது என்றால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடுவோம் தாமஸ் ஆல்வா எடிசன்  என்று ..

                                                        ஆனால் , நம்முடைய இந்த பதில்கள் முற்றிலும் உண்மையானது அல்ல என்றும் இந்த கண்டுபிடிப்புக்களின் பின்னணியில் மட்டுமன்றி இந்த நவீன உலகின் பல கண்டுபிடிப்புக்களுக்குமான நாயகனாக இருந்தவர் , மற்றும் நூறு வருடங்களுக்கு முன்னமே வயர்லஸ் தொழில்நுற்பம் பற்றி கருத்து தெரிவித்தவர்தான் வரலாறுகளில் இருட்டடிப்பு செய்யப்பட்ட விஞ்ஞானி நிக்கோலோ டெஸ்லாஇன்றைய உலகில் நாம் பயன்படுத்தும் 80% மின்சாரத்தால் இயங்கும் பொருள்களுக்கு அடித்தளமிட்டவர் என இன்று நாம் அவரை கொண்டாடினாலும்கூட அவர் வாழ்ந்த காலத்தில் அவர் அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை என்பதே உண்மை

                                                 1856 ஜூலை  10 ஆம் திகதி  குரோஷியாவின்  ஸ்மில்ஜன்  எனும் இடத்தில பிறந்த டெஸ்லா சிறுவயதிலிருந்தே “Eidetic memory “ எனும் சிறப்புத்திறன் கொண்டவர் ( எப்போதோ ஒரு தடவை பார்த்த விடயங்களை துல்லியமாக நினைவில் கொண்டுவந்து விளக்கும் திறன் ) படிப்பில் மிகப்பெரிய திறமைசாலியாக இருந்த டெஸ்லா , மோசமான சில சகவாசத்தினால் சூதாட்டத்தில் ஈடுபாடுகொண்டு ஒருகட்டத்தில் படிப்பையே இடையில் நிறுத்திவிட்டு தொலைபேசி நிறுவனமொன்றில்  எலக்ட்ரீஷியனாக பணியாற்ற  ஆரம்பித்தார்  . பின்னர் 1884 ஆம் வருடம் நியூயார்க் நகரத்தில் செயல்பட்டு வரும்எடிசன் மெஷின் ஒர்க்ஸ்இல் எடிசனிடம் வேலைக்கு அமர்ந்தார் . அங்கேயிருந்து ஆரம்பித்தது டெஸ்லாவிற்கு சனி என்றாலும் மிகையில்லை . எடிசன் நேரடி மின்னோட்டத்தின் [DC/ direct current]  கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது டெஸ்லா மாற்று மின்னோட்டத்தின்  (AC)  மூலம் குறைந்த செலவில் , கூடிய விரைவில் மின்சாரத்தினை வழங்க முடியும் என நிரூபிக்க முயன்றார் . இது எடிசனுக்கு மிகுந்த கோபத்தினை ஏற்படுத்தியதெனலாம் . ஏனெனில் , டெஸ்லா கூறுவதில் உண்மை இருப்பதை உணர்ந்துகொண்டாலும் அதனை ஒப்புக்கொள்ள எடிசன் முன்வராமைக்கு முக்கிய காரணம் எடிசன் காப்புரிமை வாங்கிவைத்திருந்த அத்தனை   கண்டுபிடிப்புக்களுக்குமான வடிவமைப்பானது DC மின்சாரத்தினை அடிப்படையாக கொண்டது . (எடிசனுடைய இந்த DC கரண்ட் சிஸ்டம் மூலம் நீண்ட தூரத்திற்கு மின்சாரத்தை கடத்த முடியாது . அதனால் ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்திலும் ஒரு பவர் பிளான்ட்டினை உருவாக்கி அங்கிருந்து மின்சாரத்தினை உற்பத்தி செய்ய வேண்டும் . இது செலவு அதிகம் பிடிக்கும் விடயமாக இருந்தது .) தன்னுடைய சுய லாபத்திற்காக எப்படியாவது டெஸ்லாவின் கண்டுபிடிப்பினை மக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடாது என முடிவெடுத்த எடிசன் AC கரெண்ட் பாதுகாப்பற்றது எனும் பொய் வதந்தியினை நாடு முழுவதும் பரப்பிவிட்டதுடன் , வதந்திக்கு ஆதாரமாக நாய்,  பூனை போன்ற மிருகங்களை கடத்திவந்து அவற்றின்மீது மின்சாரத்தை பாய்ச்சிக் கொன்றுவிட்டு டெஸ்லாவின் AC கரண்டின் மீது பழியை தூக்கிபோட்டுக்கொண்டிருந்தார் . ஆனாலும் எடிசனின் சகுனித்தனங்களையெல்லாம் முறியடித்து , இந்த உலகத்தின் எதிர்காலமே AC கரண்டில்தான் தங்கியிருக்கிறது என்பதனை நிரூபித்தார் டெஸ்லா . இதனடிப்படையில் உலகின் முதலாவது பவர் பிளான்ட்  அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சியில் டெஸ்லாவின் AC கரண்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது .  டெஸ்லாவின் AC Current (Alternating current)  எனும் கண்டுபிடிப்பே இன்றும் நாம் பயன்படுத்திவருகின்றோம் என்பதும் குறிப்பிடத்தக்கது  

                                                    “எக்ஸ் ரே”  தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களில் வல்லவராக இருந்தார் டெஸ்லா. டெஸ்லாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று  [tesla coil]. இதன் மூலமாக அதிக மின் அழுத்தம் கொண்ட மின்சாரத்தை உருவாக்க முடியும் எனவும்  இதனைக்கொண்டு ரேடியோ அலைகளை குறிப்பிட்ட அதிர்வெண்ணில் அனுப்பவும்  பெறவும் முடியும் என கண்டுபிடித்த  டெஸ்லா முதன் முதலாக ரேடியோ சிக்னலை அனுப்புவதற்கு  தயாரானபோது  ( 1895 இல்அவரது ஆய்வகத்தில்  ஏற்பட்ட தீ  விபத்தில் பல ஆண்டுகால உழைப்பும் சாதனங்களும் வீணாய் போனது. அதன் பிறகு டெஸ்லா ரேடியோவிற்கு காப்புரிமை பெற விண்ணப்பிக்கவில்லை . என்றாலும் கூட  அவர் ரேடியோவினை  கண்டுபிடிப்பதில் தொடர்ந்தும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் . அதேசமயம் இத்தாலியை சேர்ந்த  மார்க்கோனி என்பவரும் இங்கிலாந்தில் ரேடியோ கண்டுபிடிப்பில் ஈடுபட்டு வந்ததுடன்அமெரிக்காவில் ரேடியோவிற்கான காப்புரிமையை பெற விண்ணப்பித்து இருந்தார். எனினும்  அவருடைய கருவி டெஸ்லாவின் கருவியோடு ஒத்துப்போவது போல இருந்தபடியால் அதற்கு காப்புரிமை கொடுக்கப்படவில்லை. ஆனால் டெஸ்லாமீது கடும் கோபத்திலும் பொறாமையினாலும் தகித்துக்கொண்டிருந்த எடிசன் தன்னுடைய நிதி பலத்தினை பயன்படுத்தி மார்கோனிக்கு ஆதரவளிக்க   ஆரம்பித்தார் . திடீரென அமெரிக்க காப்புரிமை நிறுவனம்  மார்கோனிக்கு ரேடியோவிற்கான காப்புரிமையை வழங்கியது. 1909 ஆம் ஆண்டு மார்க்கோனிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது . இதன் பின்னணியில் செயல்பட்டவர் எடிசன் என்பது பலருக்கும் தெரிந்திருந்தது . அப்போதும் டெஸ்லா இது எதையுமே கண்டுகொள்ளாமல் தனது கண்டுபிடிப்புக்களில் முழு மூச்சுடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் . எனினும் தன்னுடைய கண்டுபிடிப்புக்களை பணத்திற்காக விற்கும் ஒரு வியாபாரியாக டெஸ்லா இருக்கவில்லை என்பதால் அவரது கண்டுபிடிப்புக்களுக்கான ஸ்பொன்சர் தேவை என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சினையானது டெஸ்லாவிற்கு . வயர்லஸ் தொடர்பாடல் எனும் கண்டுபிடிப்பிற்காக டெஸ்லாவிற்கு நிதியுதவி செய்வதாக கூறியிருந்த ஜே. பி மோர்கன் என்பவர் மார்க்கோனி வானொலியை கண்டுபிடித்துவிட்டதால் இனி வயர்லஸ் கண்டுபிடிப்பானது தேவையில்லாத ஓன்று என கூறி நிதியுதவியினை மறுத்தமையானது டெஸ்லாவை மிகப்பெரிய சோகத்திற்கு உள்ளாக்கியது . தான் பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்த ஒன்றே தனது கனவுத் திட்டமான வயர்லஸ் கண்டுபிடிப்பிற்கு எதிராக மாறியதை எண்ணி , மார்க்கோனி மீதும் , எடிசன் மீதும் 1915 ஆம் ஆண்டு  வழக்கு தொடர்ந்தார் டெஸ்லா . சோகம் என்னவென்றால் இந்த வழக்கின் தீர்ப்பானது 1943 ஆம் ஆண்டு டெஸ்லா அநாதரவாக இறந்துபோன ஆறு மாதங்களுக்கு பின்னரே அமெரிக்க உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டது . தீர்ப்பின்பிரகாரம் வானொலி கண்டுபிடிப்புக்கான அனைத்து காப்புரிமையும் மார்கோனியிடமிருந்து டெஸ்லாவிற்கு வழங்கப்பட்டது . ( இது தெரியாமல் இன்னுமே நம்முடைய இலங்கையில் உள்ள வானொலிகள்வானொலியை கண்டுபிடித்தது மார்க்கோனி மார்க்கோனி”  என ஜிங்கிள்ஸ் ஒலிபரப்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே காலக் கொடுமை )

 

                                       மக்களின் நலனுக்காக தன்னுடைய அறிவையும் உழைப்பையும் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த டெஸ்லா , எடிசன் போன்ற பணத்தாசை பிடித்த துரோகிகளால் முதுகில் குத்தப்பட்டு அந்திமகாலத்தில் ஜனவரி 07,1943 அன்று நியூயார்க்கர் எனும் ஹோட்டல் அறையில் இறந்துபோனார் . அறிவியல் உலகம்  டெஸ்லாவின் பங்களிப்பினை மனதில்கொண்டு  அவருக்கு பெருமை சேர்க்கும்விதமாக  Magnetic Flux Density- அளப்பதற்கான அளவையாக  டெஸ்லாவின் பெயரை பயன்படுத்திக்கொண்டனர் . மேலும், எலான் மஸ்க்  டெஸ்லாவை கௌரவப்படுத்தும் விதமாகவே அவரது நிறுவனத்திற்கு டெஸ்லா எனும் பெயரை சூட்டிக்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

எழுத்து : பிரியா ராமநாதன்

யாழ் சோனகர் தெரு – தமிழ் முஸ்லிம் மக்களின் சொல்லப்படாத கதைகள்!

உள்நாட்டு யுத்தம் நடைபெற்று சமாதானமான நாடுகளில் இலங்கையும் ஒன்றான போதும் இங்கு வாழும் தமிழர்களின் மன யுத்தம் இன்னும் சமாதானத்தை அடையவில்லை. உள்நாட்டு போரின் வடுக்களை சுமந்து நிற்கும் யாழ்ப்பாண தமிழ் சமூகங்களில் முஸ்லிம் இனத்தவர் பலர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டு வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களுள் போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து, மீண்டும் மீள்குடியேறியவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை கதையையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் அக்கறையும் இருக்கிறது. யாழ் சோனகர் தெருவில் பிறந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் இம் மக்கள் பற்றி நாம் கேட்டறிந்த கதைகளை வாசகர்களுக்கு சொல்லும் கடமையில் விரிகிறது இக் கட்டுரை.

இலங்கையின் வடமாகாணத்தில், யாழ்ப்பாணத்தின் சோனகர் தெரு வீதியையும், அதன் அண்மைய பிரதேசங்களையும் பூர்வீகமாக கொண்ட தமிழ் முஸ்லிம் மக்கள் அனைத்து இன தமிழர்களுடன் ஒற்றுமையாக வசித்து வந்தனர். உள்நாட்டு போரின் தாக்கங்களை தாங்கியவாறு அன்றாட கடமைகளை நிறைவேற்றி வந்த அவர்களுக்கு 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி வாழ்நாளில் மறக்கவே முடியாத தருணமாக மாறியது. அன்றுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்து முஸ்லிம் மக்களையும் யாழ். உஸ்மானியா கல்லூரியில் ஒன்று கூட்டினர். திடிரென இன சுத்திகரிப்பு எனும் பெயரில் அவர்கள் அனைவரையும் ஊரை விட்டு வெளியேறுமாறு அறிவித்தனர். அதிரடியான இந்த அறிவிப்பால் மனப்பதற்றமடைந்த அம் மக்கள் வேறு வழி ஏதும் இன்றி சொந்த மண்ணையும் கனவுகளையும் தொலைத்து, அங்கிருந்து இடம்பெயர்ந்தனர்.

பதீலா

அன்று வேற்றுமை இன்றி ஒரே பாடசாலையில் பயின்றதும் சோனகர் தெருவில் விளையாடிய அந்த அழகிய காலங்களும் காலச்சுவடுகளாக பதிந்தவை. ஆனால் சற்றும் எதிர்பாராத நேரத்தில் துப்பாக்கி முனையில் இவ்வூரை விட்டு வெளியேறுமாறு அறிவித்தபோது 12 வயதே நிரம்பிய பெண் தான் அனுபவித்த இன்பங்கள் இன்றோடு முடிவுக்கு வந்துவிட்டதாக கருதியதாக 90களில் இடம்பெயர்ந்து சென்ற பதீலா என்பவர் தன் கதையில் எமக்கு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மெல்ல வளர்ந்து வரும் வளமிக்க எதிர்காலத்தை பாதியிலே பிடுங்கி எறியப்பட்ட செடிகளாக யாழ் முஸ்லிம் தமிழர்கள் இலங்கையின் பிற பகுதிகளான கொழும்பு, புத்தளம், பாணந்துறை போன்ற ஊர்களில் தஞ்சமடைந்தனர்.

அதன் பின் வருடங்கள் பல கழிந்த நிலையில் நாட்டில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து 2008 – 2010 காலப்பகுதிகளில் உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் இடம்பெயர்ந்த அந்த மக்கள் தமது தாயகமான யாழ்ப்பாணத்துக்கு மீள்குடியேற தொடங்கினர். இதில் தனிக்குடும்பங்களாக சென்றவர்களில் பலர் பெரிய குடும்பங்களாக சோனகர் தெரு வீதிக்கு திரும்பினர். ஆனால் வெளியேற்றத்தின் போது எதிர்கொண்ட துன்பங்களைப் போல் திரும்பிய பின்னும் மேலும் பல இன்னல்களை இவர்கள் இன்றுவரை சந்தித்து வருவதாக தெரிவிக்கின்றனர். இங்கிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் சந்ததியினருக்கும் இங்கே சொந்த வீடு அல்லது சொந்த நிலத்திற்கான உரித்து இருக்கின்ற போதும், அவை சரிவர பதியப்படவில்லை… அரசாங்க வீட்டுத்திட்டங்களில் இன்னும் அவர்களுக்கு உரிமையான வீடுகள் வழங்கப்படவில்லை என இவர்கள் கூறுகிறார்கள். தாயாகத்தில் தமக்கான இருப்பிடம் இருக்கும் அல்லது கிடைக்கும் எனும் நம்பிக்கையில் திரும்பி வந்தவர்களுக்கு அது எட்டாக்கனியானது..!

2016ஆம் ஆண்டு சுமார் 3700 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர். ஆனால் இன்றுவரை அவர்களுக்கான முழுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும், அதில் சுமார் 700 குடும்பங்களுக்கு மேற்பட்டவர்களே தற்போது மீள்குடியேற்றப்பட்டிருப்பதாக இங்குள்ள சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றார்கள். வீட்டுத்திட்டம் வழங்குவதில் அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பலரால் வெவ்வேறு நிபந்தனைகள் மற்றும் பல தடைகள் ஏற்படுத்தப்படுவதாகவும், முஸ்லிம் மீள்குடியேற்றம் குறித்த செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமையும் இதற்கு காரணம் என்கிறார்கள். வெளியேற்றத்தின் முன் இருந்த வீடுகள், வேலைத்தளங்கள் என்பன மீள்குடியேறி வந்த பின் அழிவடைந்தமையால் உடனடியாக குடும்பங்களையும் தம்மோடு அழைத்து வந்து தங்க வைப்பதில் சிலர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதனால் வீட்டுத்திட்டம் வழங்குவதும் தாமதப்படுத்தப்பட்டுள்ளது. அடிப்படை உறைவிட தேவையைக் கூட முழுமையாக பூர்த்திசெய்து கொள்ள முடியாத கட்டத்தில் கணிசமான மீள்குடியேறிய முஸ்லிம் மக்கள் தங்களுக்கான பிரதேச பதிவை ரத்து செய்துவிட்டு திரும்பி சென்ற கதைகளும் உண்டு.

90ஆம் ஆண்டு வெளியேற்றத்தில் வெளியேறிய மக்களில் அதிகமானோர் கல்விப்பொதுச் சாதாரண தர பரீட்சை வரை மட்டுமே கல்வி பயின்றவர்களாக இருந்துள்ளனர். இதனால் தொழில் தகமைக்கான மேல் படிப்பை தொடர முடியாத சந்தர்ப்பமும் சென்ற ஊர்களில் அமையவில்லை. அமைத்துக்கொள்ளும் வசதியும் அவர்களிடம் இருக்கவில்லை. எனவே வருமானத்திற்காக இவர்களில் அநேகமானோர் இன்று பழைய இரும்பு பொருட்கள் சேகரித்து விற்பது, இறைச்சி வியாபாரம் மற்றும் கூலித்தொழில் போன்ற தொழில்களையே செய்கின்றனர். புதுத்தொழில் ஒன்றை ஆரம்பிப்பதற்கான கல்வித் தகமையோ அதற்கான ஊக்கமோ நலிவடைந்த தன்மைதான் இங்கு மீள்குடியேறிய மக்களிடம் நிலவுகிறது.

பாஜிஸ் – இரும்பு வியாபாரி

இந்நிலையில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்களின் பொருளாதாரம் பல சிக்கல்களை தாங்கி தொடர்கிறது. மிகக் குறுகிய அப்பிரதேச சாலைகளில் இரும்பு மலைக்குன்றுகள் தென்படுவது ஒன்றும் அவ்வளவு அரிதான ஒன்றல்ல. காலை முதல் மாலை வரை தொடர்ந்து பழைய இரும்பு பொருட்கள் நிரம்பிய பெரிய கடைகளில் நின்று வேலை செய்பவர்களுக்கு அந்த கடினம் தெரியும். மீள்குடியேற்றத்தின் பின் ஆரம்ப நாட்களில் சைக்கிள் ஒன்றில் பழைய இரும்புகளை சேகரித்து விற்று வந்த பாஜிஸ் என்ற வியாபாரி ஒருவர் தற்போது இந்த இரும்பு வியாபாரம் தான் தன் குடும்பத்தை நடத்த கைகொடுப்பதாக கூறுகிறார். ஒருநாளில் இரண்டு அல்லது மூன்று லொறிகளில் கம்பி, இரும்பு சட்டங்கள், பார இரும்பு வளையங்கள் போன்ற பழைய பொருட்கள் அக்கடைகளுக்குள் இறக்கி வைக்கப்படுகிறது. அவற்றை வெட்டி அறுத்து தேவைக்கேற்ப கொழும்பு போன்ற நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதில் வருமானம் என்பது சுமார்தான். இரும்புத்தொழிலை செய்யும் ஆண்களுக்கு அவ்வூரில் பஞ்சமில்லை. மேலும் பாஜிஸ், தன்னைப் போன்று தன் குழந்தைகளும் இதுபோன்ற பாதிப்புக்களையோ, தாக்கங்களையோ சந்திப்பதை விரும்பவில்லை. அவர்கள் கல்வியில் தேர்ச்சி பெற்று நல்லதொரு எதிர்காலத்தை பெறவேண்டும் என்பதையே இவரது பிரார்த்தனையாக கொண்டிருக்கிறார்.

அப்பிரதேச ஆரம்ப பாடசாலைகள் உள்பட மீள் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கல்வியின் முக்கியத்துவம் பெற்றோர்களுக்கு இல்லை என்பதும், அங்கு அடிப்படை பொருளாதார வளர்ச்சி இல்லை என்பது போன்ற காரணங்களை சுட்டிக்காட்டுகின்றனர். அதேசமயம் அங்குள்ள பாடசாலைகளில் நிர்வாக கட்டமைப்பில் ஒருங்கிணைப்பு இல்லை என்பதையும் அங்கிருக்கும் மக்கள் பொதுவாக முன்வைக்கின்றனர். அத்தோடு மீள்குடியேறி வந்த சில மாணவர்கள் கூட கல்வியை தொடர்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை, மாறாக பெரும்பாலும் பின்தொடரப்படும் இரும்புத்தொழிலுக்கு உள்வாங்கப்படுகின்றனர்! அவர்களுக்குள் ஏற்பட்ட போர் தாக்கமும் குடும்ப சூழலும் அவ்வாறு அவர்களை மாற்றியிருக்கிறது. இது தவிர போதைப்பொருளின் பரவலால் சில இளைஞர்கள் திசைமாறி செல்லும் சாத்தியமான சூழலும் இங்கு உருவாகியுள்ளது.

பாத்திமா பர்ஹானா – குழந்தைகளுக்கான உடை மற்றும் மாஃப்ளர் தயாரிப்பவர்

எந்தவொரு சமூகத்தையும் கட்டியெழுப்புவதில் பாரிய பங்காற்றுவது பெண்கள் தான்!
இருப்பினும் சோனகர் தெரு மற்றும் ஐந்து சந்தி பகுதிகளில் வாழும் தமிழ் முஸ்லிம் பெண்களை பொறுத்தவரை கட்டுப்பாடுகள் மற்றும் கோட்பாடுகளுக்கு பழக்கப்பட்டு, வயது வந்த பெண்களை பாடசாலை செல்லக் கூட சில குடும்பங்கள் அனுமதிப்பதில்லை. சமூகத்தில் பெண்களுக்கான சம உரிமை அவசியமும் இங்கே ஒரு சில இடங்களில் நிராகரிக்கப்படுகிறது. அவற்றை களைந்து தன்னார்வ சமூக நிறுவனங்களின் உதவியில் அங்கு மீள்குடியேறி வாழும் ஒருசில குடும்ப பெண்கள் சுய கைத்தொழில் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். குடும்ப வறுமையின் நிமித்தம் இவ்வாறு கைகொடுக்கும் தையல், பனை ஓலை பின்னுதல் போன்ற அழகியல் கைப்பணி வேலைகள் செய்யும் பெண்களும் பல சவால்களை சந்தித்து போராடி வருகின்றனர். குறிப்பிட்ட கட்டுப்பாடு எனும் பெயரில் பெண்கள் சமூகத்திற்கு வெளியே வருவதை கூட விரும்பாத சிலர் அவர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளதாகவும், பெண் தலைமைத்துவ அங்கீகாரமும் பெரும்பாலும் மறுக்கப்படுவதாகவும் சமூக செயற்பாட்டாளர் ஸியானா தெரிவிக்கின்றார்.

றிஸ்மியா – பனை வேலை செய்பவர்

ஆண்களின் தொழில் ஸ்திரத்தன்மை இல்லாத பட்சத்தில் ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த பெண்களின் உழைப்பும் மிக அவசியமாகும் போது பெண்களுக்கான ஒத்துழைப்பு குறைகிறது என மேலும் அவர் கூறுகிறார். எனினும் ஆர்வம் காட்டும் சில குடும்ப பெண்களுக்கு தமக்கு தெரிந்த தொழிலை கற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வில் சிறிது முன்னேற்றம் அடையச் செய்யும் முயற்சியில் சில அமைப்புடன் சேர்ந்து சில பெண்கள் செயல்பட்டு வருகின்றனர். இதைத் தவிர இவ்வாறு சுயதொழிலில் ஈடுபடுவோருக்கான சந்தைப்படுத்துதல், முகாமைத்துவ வழிகாட்டுதலுக்கான பயிற்சி என்பவை இல்லாததும் ஒரு பெரிய குறைபாடாக உள்ளது. இதனால் இத்தொழிலின் அடுத்த கட்ட முன்னேற்றம் ஸ்தம்பிதமடைவதாகவும் சுயதொழில் முயற்சியில் இருக்கும் பெண்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு இத் தொழில்களுக்கான போதுமான மூலதனமும் இவர்களிடம் இல்லை.

அதேவேளை சோனகர் தெரு மீள்குடியேறிய மக்கள் தொடர்ந்து வரும் இடர்களை சமாளித்து தமக்கான வளர்ச்சிப் பாதையை தாமே உருவாக்கிக் கொள்ளும் தீர்வுகளுக்குள், அவ்வூரின் முக்கிய போக்குவரத்து பாதையான “ஐந்து சந்தி” சாலையை ஓர் வர்த்தக உப நகரமாக்கினால் மாற்றம் காணலாம் என்பது யாழ் முஸ்லீம் இளைஞர் சங்க தலைவரான அப்துல்லாவின் கருத்து. ஐந்து சந்தி என்பது யாழ்ப்பாண நகரத்துடன் குறுகிய நேரத்துக்குள் இணையும் சாலை ஆகும். இது மானிப்பாய், சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் ஆகிய தொலைதூர ஊர்களில் இருந்துவரும் மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் என்பதோடு, மக்களுக்கான தொழில் வாய்ப்புகள் பெருகி மீள்குடியேறிய சோனகர் தெரு மக்களின் பொருளாதாரம் கட்டாயம் மேம்படும் எனவும் தெரிவிக்கின்றார் அப்துல்லா.

இங்கு இவர்களுக்கான உறைவிடத்திற்கான முழுமையான தீர்வை முதலில் பெற்றுத்தரும் பட்சத்தில் அதனைத்தொடர்ந்து ஏனைய பிரச்சினைகளான தொழில், கல்வி, பெண் சுயதொழில் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளும் தீர்க்கப்படும். எனினும் யாருடைய பொறுப்பில், எவருடைய வழி நடத்தலில் செல்வது என குழப்பங்கள் நிறைந்த பல முடிவில்லா கேள்விகளுடனான இவர்களின் சிக்கல்கள் நிறைந்த சமூக வாழ்வியல் கட்டமைப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

யாழ் மண்ணில் சோனகர் தெரு, ஐந்து சந்தி பகுதிகளில் மீள்குடியேறி வாழும் தமிழ் முஸ்லிம் சமூகத்தினரின் பிரச்சினைகள் வெறும் கதைகளாக அடைபட்டு கிடக்காமல், என்றைக்காவது அவர்களின் வாழ்வியல் சார்ந்த அடிப்படை தேவைகளுக்காக எழுப்பப்படும் குரல் மேலும் ஓங்கி ஒலித்து, அவர்களுக்கான உரிமைகள் மீட்டுக்கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன்…!

எழுத்து – ஜெஹருனி

இவர்களின் கதைகள் வீடியோ வடிவில் இப்போது உங்களுக்காக..

index.php