Blog Page 42

நண்பர்களுடன் பொழுதை கழிக்க சிறந்த இடம் – Arthur’s Pizzeria

 

வேலைப்பளுவிலிருந்து சற்று ஓய்வெடுப்பதற்காக Horton place யில் உள்ள Arthur’s Pizzeria க்கு சென்றேன். அங்கு மிகவும் பிரபலமான classic thin crust pizza மற்றும் இன்னும் சில உணவுகளையும் முயற்சிக்க முடிவு செய்தேன். நான் முயற்சித்த உணவுகள் மிகவும் பிடித்துப் போனமையால் மீண்டும் இங்கு வர வேண்டும் என முடிவு செய்தேன்.

Appetizers

Garlic Roast Paan (LKR 300)

 

இந்த Garlic bread யின் சுவை வெறுமையாகயிருந்தது. Garlic bread பூண்டின் தன்மைக் கொண்டிருந்தது. bread அதிகம் butter கொண்டு செய்யப்பட்டிருந்தமையால் மொறு மொறுப்பற்று காணப்பட்டது.

Mains

Chicken Nai Miris Pizza (LKR 1450)

Arthur’s Pizzeria வின் Chicken Nai Miris Pizza நிஜமாகவே அற்புதமாகயிருந்தது. Pizza யில் சிக்கன்,சீஸ் மற்றும் மிளகாய் ஆகியன முதலிடம் பிடித்திருந்தன. Pizza யின் ஒவ்வொரு துண்டுகளையும் ரசித்து உண்டேன். நீங்கள் சிக்கன் மற்றும் மசால சுவை பிரியர்களாக இருந்தால் மறக்காமல் Chicken Nai Miris Pizza வை முயற்சியுங்கள்.

Bacon Annasi Pizza (LKR 1600)

Bacon Annasi Pizza என சொல்லும் போது “இது என்ன…?” என்று நீங்கள் யோசிக்கலாம். அன்னாசி பழம் சாப்பிட விரும்பாதவர்கள் இந்த பெயரை கேட்டிருக்க வாய்ப்பில்லை ஆனால் நம்புங்கள் Pork நிறைய உள்ள இந்த Pizza வின் சுவை மிகவும் சிறந்தது.

Prawn Miris Pasta (LKR 880)

Arthur’s Pizzeria வின் Prawn Miris Pasta பெயருக்கு ஏற்றவாறே இறால் மற்றும் மசாலா கொண்டு தயாரிக்கப்பட்டது மேலும் இதில் சீஸ் , ஓலிவ் , புதிய மூலிகைகள் மற்றும் மிளகாய் முதலிடம் வகிக்கிறது. இந்த pasta மசாலாப் பொருட்களை அதிகம் விருப்புவோர்க்கு ஏற்றது.

Desserts

Chocolate Biscuit Pudding (LKR 320)

நான் இனிப்பு சுவையுள்ள உணவொன்றை சுவைக்க விரும்பியமையால் Arthur’s Pizzeria வின் Chocolate Biscuit Pudding யினை order செய்தேன். Chocolate sauce உடன் பரிமாறப்பட்ட இந்த Chocolate Biscuit Pudding யின் சுவை அலாதியானது. Arthur’s Pizzeria க்கு செல்லும் போது இந்த Chocolate Biscuit Pudding யினை மறக்காமல் முயற்சியுங்கள்.

Ambience

Arthur’s Pizzeria வில் அவர்களால் வரையப்பட்ட சொந்த படங்கள் காட்சிப்படுத்த பட்டுள்ளன. உட்புறமானது சிறிய ஔியுடன் இருள் சூழ்ந்ததாக உள்ளது. இங்கு வருகை தருபவர்களை விட ஊழியர்கள் குறைவாகவே உள்ளனர். காலப்போக்கில் இந்த நிலை மாறக் கூடும்.

 

வேலை பளுவை இனிமையாக்க…! – A Minute by Tuk Tuk

One galle face shopping center யில் அமைந்துள்ள A minute by tuk tuk உணவகத்திற்கு சென்றிருந்தோம். காலியில் உள்ள A minute by tuk tuk உணவகத்திலும் பார்க்க கொழும்பு A minute by tuk tuk உணவகத்தில் வித்தியாசமான அனுபவத்தை பெற முடிந்தது. இலங்கை கலாச்சார உணவுகளை சுவைக்க விரும்பினால் நீங்கள் செல்லக் கூடிய சிறந்த உணவகங்களில் இதுவும் ஒன்றாகும்.

 

DRINKS

The Health Nut (LKR 750)

 

Alcohol பயன்படுத்தாதவர்களுக்கு Health nut mocktail பொருத்தமானது. இந்த mocktail லில் சற்று இனிப்பு சுவை உள்ளதால் இலகுவாக சுவைக்கலாம். உடல்நலம் குறித்து அக்கறை கொண்டவர்களுக்கும் சரியான உணவை விரும்புவோர்க்கும் Health nut mocktai மிகவும் ஏற்றது.

 

Smirkin Gimlet (LKR 950) Simkrin Gimlet என்பது lychee யில் தயாரிக்கப்படும் ஒரு பானமாகும். இது gin யின் சுவையை கொண்டது. இந்த எளிமையான பானம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.

 

Jack to a King (LKR 950)

அடுத்து நாங்கள் முயற்சித்த பானம் மதுவின் சுவை கலந்த பானமாகும். இலங்கை முறைப்படியான ஓர் பானத்தை சுவைக்க விரும்புபவர்களுக்கு இந்த பானம் பொருத்தமானது. இந்த பானம் நடுத்தர அளவிலான தேங்காயில் பரிமாறப்படுகிறது. மது மற்றும் தண்ணீர் கலந்த இந்த பானம் எங்களுக்கு பழக்கமான மற்றும் வித்தியாசமான அனுபவத்தை அளித்தது. இருப்பினும் இந்த பானம் வெவ்வேறு கலவைகளின் சுவையாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

 

Starters

Aunty Aida’s Mutton Soup (LKR 950)

நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது வீட்டில் ஆட்டுக்கால் சூப் குடித்தது உண்டா…? இந்த சூப்பை நாங்கள் முயற்சித்த போது வீட்டில் சூப் குடிப்பது போல் உணர்ந்தோம். Roast பாணுடன் பரிமாறப்படும் இந்த சூப்பானது மசாலா,ஆட்டிறைச்சி,பயறு வகைகளுடன் தயாரிக்கப்படுகிறது.

Mains

Taka Taka (Crab) (LKR 1400)

அடுத்து நாங்கள் முயற்சித்தது நண்டு கொத்து. Oven யில் bake செய்யப்பட்ட இந்த உணவு அனைவருக்கும் பிடித்ததாக இருக்காது ஏனெனில் இதில் கொழுப்பும் காரமும் சற்று அதிகமாக உள்ளது.

It’s a Wrap (1200)

அடுத்து நாங்கள் முயற்சித்தது ஒரு சைவ உணவு. இது Pulled pork என்று அழைக்கப்படும் அமெரிக்க barbecue உணவை அடிப்படையாக கொண்டது. இதில் பன்றியிறைச்சிக்கு பதிலாக பலாப்பழம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அவகோடா பழத்திலிருந்து தயாரிக்கப்படும் சம்பல் ஒன்றும் பரிமாறப்படுகிறது.

Dessert

Mangoficient (LKR 800)

Mangoficient ஒரு dessert ஆகும். Sorbet dessert கள் பொதுவாக frozen fruitகளில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன ஆனால் இந்த பழுத்த மாம்பழ grill sobert dessert மிகவும் மென்மையானது.

Ambience

One galle face யில் உள்ள A minute by tuk tuk உணவகத்தின் கலைப்படைப்புகள் மற்றும் அலங்கார தாவரங்களாலான இயற்கைச் சூழல் ஓய்வெடுக்கவும் நிதானமாக சாப்பிடவும் சிறந்த இடமாகும்.

பௌத்தாலோக மாவத்தையில் காணப்படும் பிஸ்டரோ 82 உணவகம்

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் காணப்படும் பிஸ்டரோ 82 உணவகம் உணவு பிரியர்களின் விருப்பத்திற்குறிய உணவகமாகும். மதிய வேலை உணவுகள் மற்றும் பிரஞ்சு சிற்றுண்டிகளை (brunch) உண்டு நேரத்தை கழிப்பதற்கு சிறந்த இடமாகும்.
கொழும்பில் காணப்படும் சிறந்த உணவகங்களில் பிஸ்டரோ 82 ஒன்றாகும்.

Drinks

Caramel Macchiato (LKR 700)

நான் ஒரு காப்பி பிரியர் என்பதால் எனக்கு Caramel Macchiatos பானம் மிகவும் பிடித்திருந்தது.
நீங்களும் காப்பி பிரியர் என்றால் Caramel Macchiatos பானம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.

 

  Chocolate Cookie Frappe (LKR 700)
சிறுவர் முதல் பெரியவர்கள் மட்டும் அனைவராலும் விரும்பப்படும் ஓரியோ மூலம் தயாரிக்கபடும்
இப்பானத்திற்கு நான் அடிமை என்றே சொல்லலாம்.

Mains

Granola Bowl (LKR 800)

வெயில் காலங்களில் ஆரோக்கியமான உணவு பண்டம் உண்பதற்கு செய்கின்றீர்களா ?
Granola Bowl என்ற உணவு பண்டத்தை முயற்ச்சி செய்து பாருங்கள். smooth vanilla, yogurt,almond granola, blueberries, pumpkin seeds சேர்க்கப்பட்ட சுவையானதும் ஆரோக்கியமான உணவு பண்டமாக Granola Bowl காணப்படுகின்றது.

French Toast (LKR 700)நண்பர்களுடன் உல்லாசமாக பொழுதை களிக்க நினைக்கும் உங்களுக்கு சிறந்த சிற்றுண்டியாக அமையும் French Toast என்பதை நான் நம்புகிறேன்.

 

Spicy Beef and Cheese Panini (LKR 900) காரமான மாட்டிறைச்சி மற்றும் சீஸ் பான் உங்களுக்கு ஒரு வித்தியாசமான உணர்வை தரும்.
இதில் சேர்க்கப்படும் மசாலா வகைகள் அனைத்தும் சிறந்த அறுசுவையை தரக்கூடிய வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. அனைவராலும் உண்ண கூடிய உணவு பண்டம் இது.

Desserts

Blueberry Cheesecake (LKR 600)

 

Blueberry Cheesecake எனக்கு பிடித்த கேக் வகைகளில் ஒன்று
கேக்கில் Blueberry சேர்மானம் அதிகம் காணப்படுவதால் இச்சுவை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறேன்.

Double Chocolate Brownie (LKR 300)

துரதிஷ்ட வசமாக எனக்கு Double Chocolate Brownie பிடிக்கவில்லை. எனக்கு சாக்லட் சுவை பிடிக்காது
சாக்லட் சுவை பிரியர்களுக்கு பிடித்த உணவாக காணப்படும் என நான் நம்புகிறேன்.

Ambience

எனது பொழுது போக்கு நேரத்தை பிஸ்டரோ 82 இல் சிறப்பாக களித்தேன். மிகவும் குளிர்ச்சியாகவும் மனதிற்கு இதமான இடமாக பிஸ்டரோ 82 இருந்தது.

தமிழர் பண்பாட்டில் சிறுதானியங்கள்

 

நாம் வாழும் 21ஆம் நூற்றாண்டில் அந்நிய நாட்டு உணவு பழக்கவழக்கங்கள் நம்மில் ஆதிக்கம் செலுத்துகிறது.பல நோய்கள் நம்மை சுற்றி உலா வருவதற்கு உணவு பழக்கவழக்கங்களும் ஓர் காரணமாகும். நம் மூதாதயர் அதிக காலம் உயிர் வாழ்ந்ததற்கு அவர்களது உணவு பழக்கவழக்கமும் முக்கிய காரணமாக திகழ்கிறது.
அவர்கள் உணவாக உட்கொண்ட அனைத்து உணவுகளுமே மருத்துவத்தை கொண்டிருந்தமையால் அவ்வளவு எளிதில் நோய்கள் அவர்களை தொற்றிக்கொள்ளவில்லை . சிறுதானியங்கள் அதிகம் உட்கொண்ட அவர்கள் சிறுதானியங்களின் நன்மைகளை நமக்கு அனுபவம் ரீதியாக சொல்லி தந்துள்ளார்கள்.
தமிழர் பண்பாட்டில் சிறுதானியங்கள் அதிகம் செல்லவாக்கு செலுத்துகிறது.
சிறுதானியங்கள் பழந்தமிழர் உணவில் பெரும் பங்கு வகித்தது என்பதை பல்வேறு சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

வரகு

இது பண்டைய தமிழர்கள் பொதுவாக உட்கொண்ட தானியமாகும்.
தங்களது நாளாந்த உணவில் வரகை பயன்படுத்தி அதிக உணவு பண்டங்களை செய்து உண்டு மகிழ்ந்தனர் .
வரகு தானியம் அதிகளவில் சேமிக்கப்பட்டதன் காரணம் இதை பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. வரகு 7 அடுக்கு தோல்களை கொண்டது .
வரகில் புரதம், கல்சியம், விட்டமின் B ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்பியுள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.
வரகின் பயன்பாடு தற்காலத்தில் குறைந்து வருவது வருத்தத்திற்குரிய விடயமே !

சாமை
பண்டைய காலத்தில் பயிரிடப்பட்ட சிறு தானியங்களில் சாமையும் ஒன்றாகும் அதிகம் பூச்சி இனங்கள் தாக்காத இச்சிறுதானியம் எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது.
உடல் வலி , ஆண்மை குறைவு , உடற்சோர்வு போன்றவற்றை போக்கும் வல்லமை கொண்டது.
அதிக மருத்துவ குணம் கொண்ட சாமையை பயன்படுத்தி சத்துமிக்க ரொட்டி, புட்டு, கேக், பிஸ்கட் செய்யலாம்.

தினை

இறடி, ஏளல், கங்கு போன்ற பெயர்களில் தினை அழைக்கப்படும்.
10000 ஆண்டுகளுக்கு மேலாக உற்பத்தி செய்யப்படும் இத்தானியத்தை விலங்குகளுக்கும் உணவாக பயன்படுத்தினர் பண்டைய தமிழர்கள்.
புலவர் பெருங்கெளசிகனார் , குறுந்தொகை, நற்றிணை, மலைபடு கடாம், ஐங்குறு நூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை, பெரும்பானாற்றுப்படை ஆகிய நூல்களிலும் தினை பற்றி பாடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தினையின் பயன்பாடு மக்களோடு மக்கள் கலந்து இருந்ததை உறுதி செய்கிறது.

குதிரைவாலி
தமிழர்களின் உணவில் மிக முக்கிய பங்கு வகிக்கும் தானியமாக குதிரைவாலி காணப்படுகிறது. இது ஒரு புன் பயிர் வகையை சார்ந்தது
நெல் போன்ற பயிர்கள் விளையாத நிலங்களில் இவை அதிகமாக பயிரிடப்படுகிறது.
இதன் அரிசியை வேகவைத்தும், தண்ணீரில் ஊறவைத்தும் சாப்பிடும் பழக்கம் உள்ளது. இதிலிருந்து கிடைக்கும் விதையை ஊறவைத்து பியர் செய்கிறார்கள்

கம்பு

தமிழர்கள் உடல் உஷ்ணத்தை குறைத்து கொள்ளுவதற்கு கம்பை பயன்படுத்தினர்
கம்பிலிருந்து அடை ,கூல், காமக்கலி என்பன தயாரிக்கப்பட்டது.
தமிழர் பண்பாட்டில் விருந்தினரை கம்பங்கூழ் கொடுத்தே வரவேற்றனர் .
தற்காலத்தில் கம்பின் பயன்பாடு குறைந்ததற்கு காரணம் கம்பை உற்பத்தி செய்ய அதிக வேலை செய்ய வேண்டியிருப்பதும், அதற்கு அதிக நேரம் தேவைப்படுவதும்தான்.

கேழ்வரகு

குரக்கன் என்று அழைக்கப்படும் கேழ்வரகு தற்காலத்தில் சக்கரை நோயாளிகள் சாப்பிடும் தானியம் என்று அறியப்படுவது கவலைக்குரிய விடயமே . பண்டைய தமிழர்கள் தங்களது உடல் நிலையை நோயில்லாமல் பேணுவதற்கு கேழ்வரகு அதிகம் உதவி செய்துள்ளது.
உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.
அனைத்து விதமான வயதினருக்கும் நன்மையை மட்டுமே செய்ய கூடிய குரக்கனை அன்றாட உணவில் நாமும் பயன்படுத்துவோம்.

குமரிக்கண்டம் உண்மையா? ஓர் அலசல்!

மூழ்கிய வரலாறு  – குமரிக்கண்டம் (லெமுரியா)
உலகின் முதல் மனிதன் பிறந்ததும் தமிழ் மொழி உதித்ததும் குமரிக்கண்டத்தில் தான் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழ் நாட்டில் தொடங்கி கிழக்கே ஆஸ்திரேலியா முதல் மேற்கே மடகஸ்கார் வரையுள்ள அந்தமான் ,இலங்கை, மாலைத்தீவு என அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய இந்திய அமைப்பிலிருந்த மாபெரும் தீபகற்ப நாடு தான் நம் தமிழ்நாடு.

முன்னொரு காலத்தில், பாகுபலி திரைப்படத்தில் வரும் மாபெரும் ராஜ்ஜியமாக இயங்கிக் கொண்டிருந்த இந்த குமரிக்கண்டம்  தற்போது ஆடி ஓய்ந்து கடலுக்கடியில் உறங்கிக் கொண்டிருக்கிறது.

குமரிக்கண்டம் பற்றிய ஆதாரம் அறிவியல் ரீதியாக இல்லாமல் சங்க இலக்கியங்களில் மட்டும் இருப்பதால் சிலர் நம்ப மறுக்கின்றனர்.

தொல்பொருளியல் ரீதியாக குமரிக்கண்டம் இல்லை என்ற ஆதாரமும் இல்லை என்பதால், குமரிக்கண்டம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் என நம்பப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவில் உள்ள Wits பல்கலைக்கழகத்தில் லீவிஸ் ஏஷ்வால் எனும் பேராசிரியரின் தலைமையில் ஒரு குழு மொரிசியல் தீவிலுள்ள கடற்கரை பகுதிகளில் நடத்திய ஆராய்ச்சிகளில் மூன்று கோடி ஆண்டுகள் பழமையான சிற்கான் எனப்படும் பல வண்ணங்களில்  ஔிரும் பாறைகளைக் கண்டுப்பிடித்தனர். மேலும் மற்ற தீவுகளிலுள்ள பாறைகளனைத்தும் 90 லட்சம் ஆண்டுகள் மட்டுமே பழமையாக இருக்க இப்பாறைகள் மட்டும் எப்படி 3 கோடி ஆண்டுகள் பழமையாக இருக்க முடியும் என ஆழ செய்த ஆராய்ச்சியில் இப்பாறை படிவுகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பெருங்கடலில் மாபெரும் கண்டமாக இருந்திருக்கலாம். சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட மாபெரும்  கடல் சீற்றம்  மற்றும் கண்டத்திட்டு நகர்வினால்  இந்தக்கண்டம் முழுவதுமாக அழிந்துள்ளது எனவும் , மேலும் இப்பாறை படிவுகள் கடல் பேரலையினால் மொரிசியல்  வரை கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் மிக உறுதியாக கூறுகிறார்.

ஆஸ்திரேலிய மற்றும் ஆப்பிரிக்க மலைவாழ் பழங்குடியினர் பேசும் மொழி தமிழ் போல் இருப்பதும், சுமேரியன், இந்து வெளி நாகரிகத்தை உலகின்  தொன்மையான நாகரிகங்கள் என தற்போதைய அறிவியலாளர்கள் கருதும் நிலையில், தமிழ்நாட்டிலுள்ள கடலோர பகுதிகளை ஆராய்ச்சி செய்த கிரஹம் ஹன்கொக் என்பவர்  பூம்புகாரின் நாகரிகம் 1,10,000ஆண்டுகள் பழமையானது எனவும் அந்த நாகரிகம் கடல் கோள்களால் அழிந்தது எனவும் கூறுகின்றார்.

இப்பேற்பட்ட நாகரிகத்தை இன்றும் ஆராய்ச்சி செய்யாமல் இருப்பது தமக்கு ஆச்சரியமாக இருப்பதையும் தெரிவித்தார்.

20,000 ஆண்டுகள்  பழமை வாய்ந்த தமிழனின் வரலாற்றை கண்டறிவதில் உலக நாடுகளின் அரசியலும் பொதிந்துள்ளது என்பது மறுக்கமுடியாது போலும்..

கொரோனாவின் கோரம்!

   கொரோனாவின் கோரம்!

உலக நாடுகளை தன் பிடியால் உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பலவித அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் குறித்தான சரியான விளக்கம் மக்கள் மத்தியில் அதிகம் அறியப் படாத ஒன்றாகவே காணப்படுகிறது.

கொரோனா பற்றிய ஒரு சிறு விளக்கம்:

இந்த வைரஸானது மிருகங்கள் மூலம் பரவியது எனவும் சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகளால் தவறுதலாக பரவப்பட்டிருக்கலாம் எனவும் பலதரப்பட்ட காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. தற்போது உள்ள நிலைமையின் படி நாம் பாதுகாப்பான வழிகளை தேட வேண்டிய கட்டத்தில் உள்ளோம் என்பதே உண்மை. இந்த வைரஸ் காரணமாக சுமார் லட்சத்துக்கும் மேலானோர் உயிரிழந்தமை குறிப்பிடதக்கது. இதன் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமம், மூச்சடைப்பு போன்றவை உருவாகும். சுவாசிப்பதில் ஏதேனும் சிரமம் தோன்றினால் உடனடியாக மருத்துவரை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த நோய் தீவிரமாகும் பட்சத்தில் சிறுநீரகம் செயலிழப்பு, நியூமோனியா ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

குழந்தைகளின் நலனுக்காக பாடசாலைகளில் சுகாதார செயற்திட்டங்களை கொண்டு வருவது மிக சிறந்த முன்னெடுப்பாக அமையும் எனவும் அன்றாட வாழ்க்கையில் சுகாதார பழக்கங்களை கையாள வேண்டும் எனவும் உலக நாடுகளின் அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.

கொரோனாவின் தாக்கம் வல்லரசு நாடுகளின் அரசியல் நோக்கம் காரணமாகவும் பரவவிடப்பட்டிருக்கலாம் என தகவல்கள் உலாவி வருகிறது. பயோ வார் எனப்படும் உயிரியலை தாக்கும் போர் முறையை சீனா பயன்படுத்திருக்கலாம். நுண்ணங்கிகள் மூலம் மனித இனத்தை பெருவாரியாக அழிக்கும் முறையே பயோ வார். இதை முதன் முதலாக ஜேர்மன் ராணுவம் முதலாவது உலக போரில் ஆந்த்ராக்ஸ், கிலாண்டேர்ஸ், காலரா போன்ற வைரஸ்களை பரவவிட்டு மனிதர்களை அழித்தது.

மேலும் சமூக வலைத்தளங்களில் கொரோனா சம்மந்தமான நிறைய வதந்திகளும் பரவி மக்களை வேறு வழிகளில் திசை திருப்பி வருகிறது. வேறெந்த தவறான வழிகளையும் தொடராமல் உடல்நலத்தை கருத்தில் கொண்டு செயற்படுவது புத்திசாலித்தனம்.

குளிர் பிரதேச பயணமா? சரும பராமரிப்பு அவசியம்!

வெப்பமான காலநிலை காலங்களில் நம் மனதும் உடலும் குளிர்ச்சியையும் குளிரான பிரதேசத்தை தேடியே செல்கிறது. அவ்வாறு நாம் குளிர் பிரதேசத்துக்கு செல்லும் போது நமது சருமம் மற்றும் சருமம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். உதாரணமாக, குளிர் பிரதேசம் ஒரு வித சோம்பலை தருவதுடன் அதிகம் வியர்க்காது. எனவே, சருமம் மிக வறட்சியாக காணப்படும். அதே சமயம் உணவு ஒவ்வாமை, உடல்நிலை மாற்றம் எனச் சமாளிக்க வேண்டிய சவால்களுக்கும் குறைவில்லை. அப்படியான சமயங்களில் அவற்றை சமாளிப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளன.

  • சரும பராமரிப்புக்கான பயண பொதிகள்

பயணத்தின் போது உடை மற்றும் உணவு பொருட்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நம் சருமப் பராமரிப்புக்கும் கொடுக்க வேண்டும். உங்களது சருமம் எவ்வாறானது என பயணத்துக்கு முன்பே சரும நிருபரிடம் சென்று அறிந்து வைத்திருக்க வேண்டும்.அப்போது தான் உங்கள் சருமத்துக்கேற்ற பராமரிப்பு வழிமுறைகளை அறிவுறுத்துவார். இதனால் சரும பாதிப்பிலிருந்து தப்பலாம்.

அவரவர் சருமத்துக்கேற்ற ஃபேஸ் வாஷ், மாய்ஸ்ச்சரைஸர், சன்ஸ்க்ரீன், லிப்-பாம் போன்ற விஷயங்களுடன் சானிடைசர், வெட் டிஷ்யூ, ரெஃப்ரெஷிங் ஸ்ப்ரே போன்றவற்றை எடுத்துக்கொள்ளவும்.
சரும பராமரிப்புக்கான `டிராவல் கிட்’ இருப்பது மிக அவசியமாகும்.

 

  • வாகன பிரயாணத்தின் போதும் பராமரிப்பு தேவை

 

 

பொதுவாக வாகனப் பயணத்தின் போது ஒப்பனைகள் அதிகம் பாவனையில் இல்லாமல் இருப்பது நல்லது.
ஏனெனில் பயணத்தால் ஏற்படும் தூசு மாசு காரணமாக முகப்பரு, ராஷஸ் போன்ற சரும ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
வறண்ட சருமத்தை தேவைப்படும் நேரத்தில் கழுவிவிட்டு மாய்ஸ்ச்சரைஸர் தடவ வேண்டும்.
மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை உதடுகளை கழுவிவிட்டு, லிப் -பாம் தடவினால், உதடுகள் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும்.

  • பருவ நிலை பராமரிப்பு

 

குளிர் பிரதேசம் குறைந்த உஷ்ண நிலையை கொண்டிருப்பதால் உடல் வறட்சி ஏற்படும். இதற்கு மாய்ஸ்ச்சரைஸர் அவசியம். தேவையான நேரத்தில் பெப்டைட் சீரத்தை (Peptide serum) முகத்தில் தடவலாம்.
இது சருத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு, சருமத்தில் ஊடுருவிச் சென்று வறண்ட சருமத்தின் முக்கிய பிரச்சனையான சருமச் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.
குளிர் பகுதி என்பதால் சிலர் குளிப்பதை தவிர்ப்பார்கள். அவ்வாறு இல்லாமல் வெதுவெதுப்பான நீரில் குளித்து சருமத்தைச் சுத்தமாக வைத்திருந்தால் சரும ஒவ்வாமையைத் தவிர்க்கலாம்.

 

தமிழர் பாரம்பரியம் | ஆயக்கலைகள்

உலகத்திற்கு வாழ்வியலை சொல்லிக் கொடுத்த சமுதாயம் நம் தமிழர் சமுதாயம்.
தமிழர் என்று பெருமை பாராட்டி கொள்ளும் தமிழர் அனைவருமே தமிழ் பாரம்பரியத்தை மறக்கலாகாது.
நம் சமூகம் அழிந்து கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் நாம் நம் மரபுகளை மறந்தது.
அப்படி மறக்கப்பட்ட மரபுகளில் ஒன்று தான் ஆய கலைகள்.


நம்மை உடலளவிலும் மனதளவிலும் திடப்படுத்துவதற்கு ஆய கலைகள் நம்மை தயார்படுத்துகின்றன.
ஆய கலைகள் 64 உள்ளது. அவை எவை என்று உங்களுக்கு தெரியுமா ?

  1. எழுத்திலக்கணம்
  2. எழுத்தாற்றல்
  3. கணிதவியல்
  4. மறைநூல்
  5. தொன்மம்
  6. இலக்கணவியல்
  7. நய நூல்
  8. கணிய கலை
  9. அறத்துப்பால்
  10. ஓகக் கலை
  11. மந்திரகலை
  12. நிமித்தக கலை
  13. கம்மியாக்கலை
  14. மருத்துவ கலை
  15. உருவமைப்பு
  16. மறவனப்பு
  17. வனப்பு
  18. அணியியல்
  19. இனிது மொழிதல்
  20. நாடகக் கலை
  21. ஆடற் கலை
  22. ஒலி நுட்ப அறிவு
  23. யாழ் இயல்
  24. குழலிசை
  25. மத்தள நூல்
  26. தயா இயல்
  27. வில்லாற்றல்
  28. பொன் நோட்டம்
  29. தேர் பயிற்சி
  30. யானையேற்றம்
  31. குதிரையேற்றம்
  32. மணி நோட்டம்
  33. மண்ணியல்
  34. போர்பயிற்சி
  35. கைகலப்பு
  36. கவர்ச்சியியல்
  37. ஓட்டுகை
  38. நட்பு பிரிக்கை
  39. மயக்குக் கலை
  40. புணருங்கலை
  41. வசியக்கலை
  42. இதளிய கலை
  43. இன்னிசை பயிற்சி
  44. பிறவுயிர் மொழியறிதல்
  45. நாடிபயற்சி
  46. மகிழறுத்தம்
  47. கலுழம்
  48. இளப்பறிகை
  49. மறைத்ததையறிதல்
  50. வான்புகுதல்
  51. வான்செல்கை
  52. கூடுவிட்டுக்கூடு பாய்தல்
  53. தன்னுறு கரத்தல்
  54. மாயம்
  55. பெருமாயம்
  56. அழற்கட்டு
  57. நீர்க்கட்டு
  58. வளி கட்டு
  59. கண்கட்டு
  60. நாவுக்கட்டு
  61. விந்துக்கட்டு
  62. புதைக்கட்டு
  63. வாட் கட்டு
  64. சூனியம்

 

பண்டைய தமிழர்கள் 64 கலைகளையும் கற்று அதில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர்.
இவற்றில் இருக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சரித்திரமே உள்ளது.

தமிழர் வரலாறு பற்றிய தகவல்கள் இன்றும் மறுக்கபட்டும் மறைக்கபட்டும் தான் வருகின்றது.
அதை மீட்டெடுக்க வேண்டியது நம் கடமை.

மன அழுத்தத்தை குறைக்குமாம் – கொக்டைல் பறவைகள்

இன்றைய நவீன உலகில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலைப்பளு காரணமாக நம் மன அழுத்தமும் அதிகரித்து வருகிறது. பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு செல்லும் நகர வாழ்க்கையில் குழந்தைகளுக்கான விளையாட்டு, சந்தோஷம் , மன ஆறுதல் என்பது குறைந்த ஒன்றாகவே காணப்படுகிறது. இது போன்ற சூழலில் வீட்டில் செல்ல பிராணிகள் வளர்ப்பது குழந்தைகளுக்கான பொழுதுபோக்கை தருவதுடன் மனத்திற்கு மகிழ்வையும், மன அழுத்தத்தையும் குறைக்கின்றது. இதில் பெரியவர்களையும் குழந்தைகளையும் கவர்ந்த சிறந்த நண்பனாக வீட்டு வளர்ப்பு கொக்டைல் பறவைகள்  திகழ்கின்றன.

ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கொக்டைல்கள் ஓர் கவர்ச்சி பறவையாகும். தன்னுடைய வண்ண நிற சிறகுகள் மூலம் மனதை கொள்ளை கொள்ள செய்யும்   இக் கொக்டைல் பறவைகள் மனிதர்களுடன் இலகுவில் பழகும் தன்மை கொண்டது . இதன் தலை பகுதியில் காணப்படும் முகடுகள் கொக்டைல் பறவையின் அழகை மேலும் அதிகரிக்கும் வண்ணம் உள்ளது. இம் முகடுகள் பறவையின் உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அமையப் பெற்றுள்ளது.

சுமார் 30cm தொடக்கம் 60cm வரை வளரக்கூடிய கொக்டைல் பறவையின் ஆயுட்காலம் 16 ஆண்டுகள் தொடங்கி 25 ஆண்டுகள் வரை ஆகும். இதன் போஷாக்கான உணவிலேயே இதன் ஆயுட்காலம் தங்கியுள்ளது. கொக்டைல் பறவைகள் தனது கால்களின் உதவியுடன் சொண்டுகளை பயன்படுத்தி உணவு உட்கொள்கிறது. பொதுவாக இந்த இன பறவைகள் விதைகள், காய் கறிகள், பழங்கள், கீரை வகைகள் என்பவற்றை விரும்பி உண்ணுகிறது.

 

கொக்டைல் பறவைகள் தன்னுடைய துணையை கவருவதற்கு செய்யும் நாடக நடனமே மிகவும் சிறப்பானது.
பார்வையாளர்கள் கொக்டைல் பிரியர்கள் ஆவதற்கு இதுவே காரணமாகும். தன்னுடைய அனைத்து செயல்களிலும் தனித்துவமான ஆற்றல்களை கொண்டிருப்பதால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் பறவையாக இது மாறியுள்ளது.மனிதர்களுடன் இலகுவில் பழகும் தன்மை கொண்ட கொக்டைல் பறவைகள் நம்மைப் போல சத்தத்தை ஏற்படுத்தும் திறனை கொண்டுள்ளது.

 

எனவே, வீட்டில் வளர்க்கப்படும் கொக்டைல்கள் உங்கள் குழந்தைகளை எலக்ட்ரானிக் உபகரணங்களை விட்டு அகலுமாறு செய்து, அவர்களை ஓடியாடி விளையாட வைக்கிறது. நன்றாக சிரிக்க வைக்கிறது. இதன்மூலம், மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் உங்களின் குழந்தைகள் பெரியளவு நன்மையடைகிறார்கள்.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பும் கொக்டைல் பறவைகளை பாதுகாப்பது நம் கடமையாகும்.

 

 

உடல் வெப்ப நிலையை தணிக்க ஆரோக்கியமான பழங்கள்

இன்றைய நவீன உலகில் உணவு தட்டுப்பாடுகள் பெரும்பாலும் இல்லையென்றாலும் அதிக உணவு உட்கொள்ளுதல், ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்ளுதல் என்பன பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.ஆரோக்கியமற்ற உணவின் மீதான நமக்குள்ள விருப்பம் குறைந்தாலே நமது உணவுப் பழக்கம் மேம்படும். இதற்கு ஆரோக்கியமான உணவு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது
அவசியமாகும்.

மாறிவரும் கலாச்சாரத்திற்கு ஏற்ப வேலைப்பளு, நேரம் இன்மை காரணமாக பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் உட்கொள்ளும் இளைஞர்கள் பழங்கள் உட்கொள்வதின் அவசியத்தை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

*ஆரோக்கியமான உணவில் பழங்கள் அதிகம் செல்வாக்கு செலுத்துகிறது.

அவகாடோ

மத்திய அமெரிக்கா வம்சாவளியை சேர்ந்த வெண்ணைப் பழம் எனப்படும் அவகாடோ மற்றைய பழங்களை போலில்லாமல் அதிக நல்ல கொழுப்பை கொண்டுள்ளது.
அதிக கலோரிகளை கொண்டுள்ள அவகாடோ ஆரோக்கியமான பழவகையாகவும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவுகிறது.

தாவரத்தின் நேரடி ஊட்டச்சத்துகளான மோனோ நிறைவுறா கொழுப்புகள், நார் சத்து, விட்டமின்கள் மற்றும் தாது பொருட்களை அதிகளவில் கொண்டுள்ள இப்பழத்தின் மூலம் உயர் குருதி அழுத்தம் , பக்கவாதம், உடற் சோம்பல், வலுவற்ற எலும்பு பிரச்சனை, மலச்சிக்கல் போன்ற நோய்களை தடுக்கலாம்.

பப்பாசிப் பழம்

மெக்ஸிகோ நாட்டிற்கு உரித்தான ருசியான கவர்ச்சியான பழமே பப்பாசிப் பழம் ஆகும். உடல் ஆரோக்கியத்திற்கு உதவி செய்யும் பப்பாசிப் பழம் பழ பிரியர்களின் விருப்பங்களில் ஒன்றாகும். குறைந்த கலோரிகளை கொண்ட பப்பாசிப் பழத்தில் கொலஸ்ரோல் கிடையாது. மென்மையாக எளிதில் ஜிரணிக்க கூடிய சதையை கொண்ட பப்பாசியில் விட்டமின்கள், பைட்ரோ நியூட்ரிங்ஸ் மற்றும் இயற்கை தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

நன்கு கரையக் கூடிய நார் சத்துள்ள உணவு என்பதால் குடல் இயக்கங்களுக்கும் , மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கும் உதவுகின்றது. ஆரோக்கியமான பார்வைக்கும் ஆரோக்கியமான சருமத்திற்கும் உதவுவதுடன் பல வகை தோல் பிரச்சனைகளுக்கும் பப்பாசிப் பழம் உதவுகின்றது .

தர்பூசணி

கோடை கால வெப்பத்தை வெல்ல சிறந்த பழமான தர்பூசணி
கோடை கால வெப்ப நிலையை தணிக்க  தேவையான நீரையும் எலக்ர்ட்ரோலைட்களையும்  கொண்டுள்ளது .

நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான விட்டமின் A யை கொண்ட தர்பூசணி குறைந்த கலோரியையும் கொழுப்பையும் கொண்டுள்ளது.
அதுமட்டுமல்லாது இதய துடிப்பை சீர் செய்வதுடன் இரத்த அழுத்தம் ,பக்கவாதம் போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கு உதவி செய்கின்றது.

டேட்ஸ்

மென்மையான எளிதில் ஜிரணிக்க கூடிய சதைகளை கொண்ட டேட்ஸ் பழங்களின் பூர்விகம் எகிப்தாக நம்பப்படுகிறது. புத்துணர்ச்சியூட்டும் டேட்ஸ் பழங்கள் நார் சத்தை கொண்டதுடன் நோய் எதிர்ப்பு சக்தி, இரத்த கசிவு மற்றும் பார்வை குறைபாடுகளுக்கு தேவையான சத்தையும்  தருகின்றது.
உடல் சோம்பலை போக்கவும் வெப்ப நிலையை தணிக்கவும் உதவுகின்றது.

*கால நிலை மாற்றங்களால் ஏற்படும் உடல் வெப்பநிலையை தடுக்க பழங்கள் உதவி செய்கிறது.

ஆகையால் ஆரோக்கியமான பழங்களை உட்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வோம்.

 

 

பெண்களைக் கவரும் தாடி ஸ்டைல்கள்!

ஃபேடட் லாங் தாடி (Faded Long Beard)

இது, வட்ட மற்றும் சதுர வடிவ முகத்துக்கான ஸ்டைல்.இந்த ஸ்டைலில் மிக டிரெண்டியான நபராக உங்களை வெளிப்படுத்திக் கொள்ளலாம். காதின் ஓரங்களில் இருக்கும் ரோமங்களில் ஆரம்பித்து கன்னங்களை நோக்கி அப்படியே தாடை வரை போகப்போக ரோமங்களின் அடர்த்தி அதிகரித்து கொண்டே போக வேண்டும். இதன் பராமரிப்புக்கு அதிக நேரம் செலவாகும். மாதம் இரண்டுமுறை சலூனுக்குச் சென்று ஷேப் மாறாமல் ட்ரிம் செய்ய வேண்டும். அதிகமான ஆண்கள் இதையே விரும்புகின்றனர்.

திக் அண்டு `வி’ ஷேப் தாடி (Thick & ‘V’ Shape Beard)

இது முரட்டுத்தனமான தோற்றத்தை விரும்புகிறவர்களுக்கான சரியான தேர்வு. இந்த ஸ்டைலுக்கு நீண்ட மற்றும் அடர்ந்து வளர்ந்த தாடி அவசியம். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு தாடியை வெட்டாமல் வளர்த்தபின் சலூனுக்குச் சென்று ஷேப் செய்துகொள்ளலாம். இது நீண்ட மற்றும் ஓவல் வடிவ முகங்களுக்கான ஸ்டைல்.

இந்த ஷேப்பை நீங்களே பராமரித்துக்கொள்ளாமல் சலூனுக்குச் சென்று பராமரிப்பது அவசியம். அடர்ந்த மீசைதான் இந்த ஸ்டைலுக்கான கெத்து. அதனால் முறுக்கு மீசைக்காரர்கள் இந்த ஸ்டைலை தயங்காமல் தேர்ந்தெடுக்கலாம்.

கான்டூர் தாடி (Contour Beard)

இந்த ஸ்டைல், வட்டவடிவ முகத்தினரை சாக்லேட் பாய் இமேஜிலிருந்து விடுவித்து முரட்டு தோற்றத்தைக் கொடுக்கக்கூடியது. கான்டூரிங் பியர்டு மூலம், உங்கள் முகத்தின் வடிவமே மாறியது போன்ற போலியான தோற்றத்தைக் கொடுக்கமுடியும். சிலருக்கு தாடியில் ரோமம் சீராக இல்லாமல் ஆங்காங்கே இடைவெளியுடன் வளரும். இவர்களுக்கு இந்த ஸ்டைல் கைகொடுக்காது.

ட்ரிம்மர், ஷேப் செய்ய உதவும் ஆங்குலர் சீப்பு மற்றும் சரியான கத்தரிக்கோல் போன்றவற்றின் மூலம் நீங்களே பராமரித்துக் கொள்ளமுடியும். ஆனால், மிகுந்த கவனமும் போதிய பயிற்சியும் அவசியம்.

16 வயது தோற்றத்தை பெற Almond face pack!

தேவையான பொருட்கள்:

  • நன்கு ஊறவைத்து, அரைத்த பாதாம் – 3
  • பாலில் ஊறவைத்த 4 தேக்கரண்டி ஓட்ஸ்
  • பாலில் ஊறவைத்த ஒரு சிட்டிகை குங்குமப்பூ
  • கடலைமாவு – 2 தேக்கரண்டி

தயாரிப்பு முறை :

நன்கு ஊறவைத்து, அரைத்த பாதாம் விழுதோடு பாலில் ஊறவைத்த ஓட்ஸ் மற்றும் குங்குமப்பூவை கலந்துகொள்ளவும்.

இதனுடன் கடலைமாவு சேர்த்து குழைத்துக்கொள்ளவும். சில நிமிடங்கள் ஊறவைத்தால், ஃபேஸ் பேக் தயார்!

பாவனை முறை :
முதலில் காய்ச்சாத பால் வைத்து முகத்தை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். முகத்தில் பால் தடவிவிட்டு, பஞ்சினால் துடைத்து எடுக்கவும். பாலிலுள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை மிருதுவாகவும் பளிச்சென்றும் ஆக்கும். சருமத்திலுள்ள இறந்த செல்கள் நீங்கிவிடும்.

ஃபேஸ் காஸ் (Gauze) எனப்படும் மெல்லிய துணியை முகத்தின் மேல் பொருத்தி தயாராக உள்ள ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் முழுக்க அப்ளை செய்யவும்.

20 நிமிடங்கள் கழித்து, ஃபேஸ் காஸை நீக்கினால் போதும். முகம் தளர்ச்சியின்றி பளிச்சென மாறியிருக்கும்.

ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 5 நாட்கள் இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்யலாம் .

பாதாம் மற்றும் ஓட்ஸில் உள்ள வைட்டமின் B , புரதம் போன்றவை சருமத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ள உதவும்.

index.php